December 5, 2025, 5:18 PM
27.9 C
Chennai

ஏழை வீட்டில் அமித் ஷா…! என்ன சாப்பிட்டார் தெரியுமா?!

amithsha hyd2 - 2025

தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாலையோரம் இருந்த வீட்டுக்கு சென்று தேநீர் குடித்து விட்டு, உரையாடிய நிகழ்வு அம்மாநிலத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இன்று ஹைதராபாத் வந்து சேர்ந்த அவர், பின்னர் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாமிடிப் பள்ளி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கு பழங்குடியினப் பெண்ணான ஜாத்வதி சோனி என்பவரின் வீட்டில் உணவு உண்டு, தேநீர் அருந்தினார். அமித்ஷாவை காண ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.

தெலங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, ரங்காரெட்டியில் பாஜகவின் உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஹைதராபாத்திற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இது.

தெலங்கானாவில், தற்போது 18 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 36 லட்சம் உறுப்பினர்களுக்கு குறிவைத்து, மெகா உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி உள்ளதாக அக்கட்சியின மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். அமித்ஷாவின் இந்த சுற்றுப்பயணம், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், வரும் 2023 தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் பாஜக அரசை அமைப்பதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பாஜக எம்எல்சி என்.ராம்சந்தர் ராவ் கூறியுள்ளார்.

amithsha hyd - 2025ஏழைப் பெண்மணியின் வீட்டில் அமித்ஷா உணவு உண்டது குறித்து செய்திகள் வைரலாகின. அங்கே அமித் ஷா என்ன சாப்பிட்டார் என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டினர்.

ஒரு நாள் பயணமாக தெலங்கானாவுக்கு வந்த பாஜக., தலைவர் அமித்ஷா ஒரு ஹரிஜனப் பெண்ணின் வீட்டில் மதிய உணவு உண்டார். அவருக்கு உப்புமா, பருப்பு, சோள மாவு சப்பாத்தி ஆகியவற்றை அந்தப் பெண்மணி கொடுத்தார்.

தெலங்கானா பயணத்தில் அமித்ஷா ஹைதராபாத் ‘பஹாடி பரிஷ் ‘ என்ற இடத்தில் உள்ள ‘ரங்கநாயகுல தண்டா’ என்ற பகுதியில் வசிக்கும் ‘சோனீ பாயி ‘என்பவர் வீட்டில் உப்புமாவோடும் பருப்போடும் சோள ரொட்டியை ருசித்து உண்டார். பின் தேனீர் அருந்தினார். பின்னர் அப்பெண்மணிக்கு கட்சி உறுப்பினர் படிவத்தை அளித்து பாஜக., உறுப்பினர் பதிவு நிகழ்ச்சிக்கு தெலங்கானாவில் இருந்து பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார்.

சனிக்கிழமை இன்று மதியம் பிரத்யேக விமானத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு வந்த அமித்ஷா அங்கிருந்து நேராக சோனீபாயி வீட்டிற்குச் சென்றார். தன் வீட்டிற்கு வந்த பாஜக., தலைவரிடம் தன் குறைகளை விவரித்த சோனீபாயி ஒரு விண்ணப்பத்தை அளித்தார். அமிர்தா பயணத்திற்காக காவல்துறையினர் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

amithsha hyd1 - 2025தெலங்கானாவில் கட்சியை பலப்படுத்துவதே நோக்கமென்று அமித்ஷா ஹைதராபாதிலிருந்து கட்சி உறுப்பினர் பதிவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக., இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வாராணசியில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாஜக.,வில் அண்மைக் காலமாக சுறுசுறுப்பாக பணிபுரிந்து வரும் சோனீபாயி என்ற பெண்மணியை பாஜக., உறுப்பினர் பதிவு நிகழ்ச்சிக்கு முதல் காரியகர்த்தராக தேர்ந்தெடுத்தார்கள். தெலங்கானாவில் உறுப்பினர் பதிவு நிகழ்ச்சியை அவருடைய வீட்டில் இருந்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமித்ஷாவோடு கட்சியின் மாநில தலைவர் லக்ஷ்மன், முரளிதர ராவ் மற்றும் பல தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories