ராகுல் காந்தியின் ராஜினாமாவும் திமுகவின் பாராட்டும்!

 

RAGUL STALIN 7 - 2026காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ள நிலையில் அவருடைய திறந்த மடல் பலரையும் உசுப்பிவிட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் ராஜினாமா மற்றும் அவரது திறந்த மடல் குறித்து திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதனை ஒட்டி எழுதியுள்ள திறந்த கடிதம் அவரது உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் ஒரு கட்சியின் தலைவர் பதவியைத் துறந்து விட்ட நிலையில், தேசியத் தலைவர் அளவு உயர்ந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியினர், அவரது தலைமையை இழந்ததற்கு வருந்தலாம், அதே நேரம் அவரது திறந்த கடிதம் கண்டு பெருமிதம் கொள்ளலாம்.

ராகுலின் பாட்டி இந்திரா அம்மையாரின் அப்பா ஜவகர்லால் நேரு, சிறையில் இருந்த போது தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

அத்தகைய பண்டித நேருவின் பாரம்பரியத்தில் வந்துள்ள ராகுல் எழுதிய திறந்த மடலும், பலரைக் கவர மட்டுமல்ல, அவர்களது சிந்தனையையும் கிளறி விட்டுள்ளது.

‘எனது போராட்டம் அரசியல் அதிகாரித்துக்கான சாதாரண போராட்டமல்ல. பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்போ, கோபமோ கிடையாது.

இந்தியா குறித்து அவர்களது (பி.ஜே.பி.) கொள்கைகளை என் உடலின் ஒவ்வொரு அணுவும் முழுமையாக எதிர்க்கிறது.

எனது ஒவ்வொரு அங்கத்திலும் ஊடுருவியுள்ள இந்தியா குறித்த குறிக் கோள்கள் எப்போதும் நேரடியாக அவர்களுடன் மோத வைக்கிறது.

இது புதிய போராட்டம் அல்ல, ஆயிரம் ஆண்டு காலமாக இந்த மண்ணின் மீது தொடுக்கப்பட்ட போராகும்.

ராகுல் காந்தி தனது திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இந்த வாசகங்கள், இந்தியாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து வந்து, அது எதிர் காலத்தில் துண்டு துண்டாக உடைந்து விடக்கூடாது என்பதில் எத்தனை எச்சரிக்கையுடன் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. திராவிட இயக்கத்தின் கருத்தும் அதுதான்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

‘இந்தியாவில் எப்போதும், ஒரு காலத்திலும் ஒரே குரல் ஒலிக்க முடியாது’ – இது இன்று ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து. அன்று தொட்டு இன்று வரை திராவிட இயக்கம் கூறும் கருத்தும் இதுதான்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து விலகி விட்ட நிலையில், அக்கட்சியின் தொண்டனாக இருந்து இந்தக் கருத்தை எடுத்துச் செல்வேன் என ‘சபதம்’ செய்துள்ளார்
ராகுல்

.ராகுலின் இந்த முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவுக் கரத்தை என்றும் நீட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories