ராகுல் காந்தியின் ராஜினாமாவும் திமுகவின் பாராட்டும்!

 

RAGUL STALIN 7 - 2026காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ள நிலையில் அவருடைய திறந்த மடல் பலரையும் உசுப்பிவிட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் ராஜினாமா மற்றும் அவரது திறந்த மடல் குறித்து திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதனை ஒட்டி எழுதியுள்ள திறந்த கடிதம் அவரது உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் ஒரு கட்சியின் தலைவர் பதவியைத் துறந்து விட்ட நிலையில், தேசியத் தலைவர் அளவு உயர்ந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியினர், அவரது தலைமையை இழந்ததற்கு வருந்தலாம், அதே நேரம் அவரது திறந்த கடிதம் கண்டு பெருமிதம் கொள்ளலாம்.

ராகுலின் பாட்டி இந்திரா அம்மையாரின் அப்பா ஜவகர்லால் நேரு, சிறையில் இருந்த போது தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

அத்தகைய பண்டித நேருவின் பாரம்பரியத்தில் வந்துள்ள ராகுல் எழுதிய திறந்த மடலும், பலரைக் கவர மட்டுமல்ல, அவர்களது சிந்தனையையும் கிளறி விட்டுள்ளது.

‘எனது போராட்டம் அரசியல் அதிகாரித்துக்கான சாதாரண போராட்டமல்ல. பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்போ, கோபமோ கிடையாது.

இந்தியா குறித்து அவர்களது (பி.ஜே.பி.) கொள்கைகளை என் உடலின் ஒவ்வொரு அணுவும் முழுமையாக எதிர்க்கிறது.

எனது ஒவ்வொரு அங்கத்திலும் ஊடுருவியுள்ள இந்தியா குறித்த குறிக் கோள்கள் எப்போதும் நேரடியாக அவர்களுடன் மோத வைக்கிறது.

இது புதிய போராட்டம் அல்ல, ஆயிரம் ஆண்டு காலமாக இந்த மண்ணின் மீது தொடுக்கப்பட்ட போராகும்.

ராகுல் காந்தி தனது திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இந்த வாசகங்கள், இந்தியாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து வந்து, அது எதிர் காலத்தில் துண்டு துண்டாக உடைந்து விடக்கூடாது என்பதில் எத்தனை எச்சரிக்கையுடன் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. திராவிட இயக்கத்தின் கருத்தும் அதுதான்.

‘இந்தியாவில் எப்போதும், ஒரு காலத்திலும் ஒரே குரல் ஒலிக்க முடியாது’ – இது இன்று ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து. அன்று தொட்டு இன்று வரை திராவிட இயக்கம் கூறும் கருத்தும் இதுதான்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து விலகி விட்ட நிலையில், அக்கட்சியின் தொண்டனாக இருந்து இந்தக் கருத்தை எடுத்துச் செல்வேன் என ‘சபதம்’ செய்துள்ளார்
ராகுல்

.ராகுலின் இந்த முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவுக் கரத்தை என்றும் நீட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories