ராகுல் காந்தியின் ராஜினாமாவும் திமுகவின் பாராட்டும்!

 

RAGUL STALIN 7 - 2026காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ள நிலையில் அவருடைய திறந்த மடல் பலரையும் உசுப்பிவிட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் ராஜினாமா மற்றும் அவரது திறந்த மடல் குறித்து திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதனை ஒட்டி எழுதியுள்ள திறந்த கடிதம் அவரது உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் ஒரு கட்சியின் தலைவர் பதவியைத் துறந்து விட்ட நிலையில், தேசியத் தலைவர் அளவு உயர்ந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியினர், அவரது தலைமையை இழந்ததற்கு வருந்தலாம், அதே நேரம் அவரது திறந்த கடிதம் கண்டு பெருமிதம் கொள்ளலாம்.

ராகுலின் பாட்டி இந்திரா அம்மையாரின் அப்பா ஜவகர்லால் நேரு, சிறையில் இருந்த போது தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

அத்தகைய பண்டித நேருவின் பாரம்பரியத்தில் வந்துள்ள ராகுல் எழுதிய திறந்த மடலும், பலரைக் கவர மட்டுமல்ல, அவர்களது சிந்தனையையும் கிளறி விட்டுள்ளது.

‘எனது போராட்டம் அரசியல் அதிகாரித்துக்கான சாதாரண போராட்டமல்ல. பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்போ, கோபமோ கிடையாது.

இந்தியா குறித்து அவர்களது (பி.ஜே.பி.) கொள்கைகளை என் உடலின் ஒவ்வொரு அணுவும் முழுமையாக எதிர்க்கிறது.

எனது ஒவ்வொரு அங்கத்திலும் ஊடுருவியுள்ள இந்தியா குறித்த குறிக் கோள்கள் எப்போதும் நேரடியாக அவர்களுடன் மோத வைக்கிறது.

இது புதிய போராட்டம் அல்ல, ஆயிரம் ஆண்டு காலமாக இந்த மண்ணின் மீது தொடுக்கப்பட்ட போராகும்.

ராகுல் காந்தி தனது திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இந்த வாசகங்கள், இந்தியாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து வந்து, அது எதிர் காலத்தில் துண்டு துண்டாக உடைந்து விடக்கூடாது என்பதில் எத்தனை எச்சரிக்கையுடன் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. திராவிட இயக்கத்தின் கருத்தும் அதுதான்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

‘இந்தியாவில் எப்போதும், ஒரு காலத்திலும் ஒரே குரல் ஒலிக்க முடியாது’ – இது இன்று ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து. அன்று தொட்டு இன்று வரை திராவிட இயக்கம் கூறும் கருத்தும் இதுதான்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து விலகி விட்ட நிலையில், அக்கட்சியின் தொண்டனாக இருந்து இந்தக் கருத்தை எடுத்துச் செல்வேன் என ‘சபதம்’ செய்துள்ளார்
ராகுல்

.ராகுலின் இந்த முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவுக் கரத்தை என்றும் நீட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories