15 ஆவது தலாய்லாமாவாக புட்டபர்த்தி சத்ய சாயி மாணவர் நியமிக்கப் பட்டுள்ளார். இது, 14வது தலாய் லாமா சொன்னபடியே நடந்தது என்கிறார்கள்.
மூன்று மாதங்கள் முன் ஒரு பன்னாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள பௌத்த குருவான 14வது தலாய் லாமா பேசுகையில் தனக்குப் பிறகு வரும் வாரிசு பாரத தேசத்தில் பிறப்பார் என்று தெரிவித்திருந்தார்.
இதன் படி, அடுத்த வாரிசை தேர்ந்தெடுத்தார் 14வது தலாய் லாமா! புதிய வாரிசுக்கு 15 ஆண்டுகள் மத விஷயங்கள் குறித்த கடுமையான பயிற்சி அளிக்கப் போகிறார்கள்.
அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கல்வி நிலையத்தில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ‘தேவாவங்க்டி’ அடுத்த குருவாகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். பதினைந்தாவது தலாய் லாமா தேவாவங்க்டியின் பிறந்த ஊர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டார்ஜிலிங்.
இவரது தந்தை பிரேமவங்க்டி. தாய் பஞ்சுராய். புட்டபர்த்தி சத்ய சாய் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தேவாவங்க்டியை பல கோணங்களில் பரிசீலித்து தேர்வு செய்துள்ளார்கள். அவனுடைய பெற்றோரைச் சந்தித்த பௌத்த குருமார்கள், அவர்களை சம்மதிக்கச் செய்து விட்டார்கள்.
அண்மையில் புட்டபர்த்தி வந்திருந்த பௌத்த மத பிரதிநிதிகள் வங்க்டியை தம்மோடு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு மைசூர் அருகில் உள்ள “பைலுகுப்பே பௌத்த ஆராமம் (golden temple)ல் பயிற்சி அளிக்கவுள்ளார்கள். பயிற்சிகள் முடித்த பின்பே 15ஆவது தலாய் லாமாவாக அதன்பின் அவர் பொறுப்பேற்பார்.
தன்னை சாய்ராம் என்று அழைத்தால் பதிலளிப்பதாக தன் நண்பர்களுடன் விடை பெறும்போது கூறிச் சென்றுள்ளார் இந்தச் சிறுவன். முன்னதாக, தனக்குப் பின்னர் அடுத்த வாரிசு இந்தியாவில்தான் பிறப்பான் என்று 84 வயதான 14வது தலாய் லாமா கூறியிருந்தார். அதுவே நிகழ்ந்துள்ளது. ஆனால் புதிய தலாய் லாமாவை சீன அரசு அங்கீகரிக்க வேண்டியுள்ளது. சக்கரவர்த்திகள் காலம் முதல் இதுவே வழக்கம்!