உயிரைப் பறித்த டிக்-டாக் வீடியோ ஆசை ! கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் !

Published:

tik tok - 2026கர்நாடாக மாநிலம், கொலர் மாவட்டம் வதகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவர் அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ கடைசி ஆண்டு படித்துவந்தார்.

இவருக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதில் ஆர்வம் அதிகம். இன்று அப்பகுதியில் அருகே இருக்கும் ஏரிக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மாலா சென்றுள்ளார். அப்போது ஏரியின் அருகே மும்முரமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவர், எதிர்பாரதவிதமாக கால் தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாமாக உயிரிழந்தார். kadalil muzhki 1 - 2026தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர். உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒரே மாதத்தில் டிக்-டாக்கைப் பயன்படுத்தி கர்நாடகாவில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img