பயணியின் 2 லட்சம் ரூபாய் பையை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

arutodriver hyderabad - 2026

விஜயவாடா: பயணி மறந்து விட்டுச் சென்ற பணப்பையை திரும்ப ஒப்படைத்து தன் நேர்மையை நிரூபித்துக் கொண்டார் விஜயவாடாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர். அவருடைய நேர்மையை பாராட்டிய போலீசார் அவருக்கு பரிசளித்தனர்.

தன் ஆட்டோவில் ஏறிய பயணியின் 2.15 லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்து தன் நேர்மையை ஆட்டோ டிரைவர் ஒருவர் நிரூபித்துக் கொண்டார். இந்தச் சம்பவம் விஜயவாடா ஒன்டௌன் காவல் நிலைய எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று நடந்தது.

இது குறித்து போலீஸார் கூறியபோது…  சித்தூர் ஜில்லா நகரியைச் சேர்ந்த கோதண்டராம், தன் மகள் நிஹாரிகாவின் எம்பிபிஎஸ் கௌன்சலிங்கிற்காக ஞாயிறு அன்று விஜயவாடா வந்துள்ளார். கவர்னர் பேட்டையில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய அவர்கள் கனகதுர்கா அம்மனை தரிசிப்பதற்கு ஆட்டோவில் சென்றார்கள்.

கோவில் தரிசனத்திற்கு செல்லும் அவசரத்தில் பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டுச் சென்றார்கள். தரிசனத்துக்குப் பிறகு தான் பணப் பை காணாமல் போன விஷயத்தை அறிந்தார்கள். ஆட்டோவில் விட்டு விட்டு வந்து விட்டோம் என்று உணர்ந்த கோதண்டராம் உடனே போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் ஏறிய ஆட்டோவின் எண் தெரியாததால் சற்று நேரம் குழம்பியுள்ளனர்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

இந்நிலையில், அவர் ஏறிய ஆட்டோ பயணித்த வழிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் பரிசோதித்து பார்த்தனர். கோதண்டராம் ஏறிய ஆட்டோவின் பின்னால் ஆத்ம பந்து என்று எழுதிய போஸ்டர் காணப்பட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் அந்த ஆட்டோவை கண்டு பிடிக்க முயன்றனர்.

அதே நேரம், மாலை 4 மணிக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் தன் வீட்டிற்குச் சென்ற பின் ஆட்டோவில் ஒரு பை இருப்பதைப் பார்த்தார். அதனைத் திறந்து பார்க்கையில் பெருமளவில் பணமும் சில சான்றிதழ்களும் இருப்பதைக் கண்டார். உடனே இன்னும் சில ஆட்டோ டிரைவர்களையும் அழைத்துக் கொண்டு, ஒன்டௌன் காவல் நிலையம் சென்றார். அங்கே காவலர்களிடம் தன் ஆட்டோவில் பயணி தவற விட்டது என்று கூறி பையை ஒப்படைத்தார்.

இதை அடுத்து, எஸ்ஐ காசிவிஸ்வநாத் முன்னிலையில் வெங்கடேஷ் அந்தப் பையை கோதண்டராமிடம் அளித்தார். பயணி தவற விட்ட பொருளை தாமாகவே முன் வந்து, திரும்பக் கொடுத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டிய போலீசார் வெகுமதி அளித்தனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories