பயணியின் 2 லட்சம் ரூபாய் பையை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

arutodriver hyderabad - 2026

விஜயவாடா: பயணி மறந்து விட்டுச் சென்ற பணப்பையை திரும்ப ஒப்படைத்து தன் நேர்மையை நிரூபித்துக் கொண்டார் விஜயவாடாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர். அவருடைய நேர்மையை பாராட்டிய போலீசார் அவருக்கு பரிசளித்தனர்.

தன் ஆட்டோவில் ஏறிய பயணியின் 2.15 லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்து தன் நேர்மையை ஆட்டோ டிரைவர் ஒருவர் நிரூபித்துக் கொண்டார். இந்தச் சம்பவம் விஜயவாடா ஒன்டௌன் காவல் நிலைய எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று நடந்தது.

இது குறித்து போலீஸார் கூறியபோது…  சித்தூர் ஜில்லா நகரியைச் சேர்ந்த கோதண்டராம், தன் மகள் நிஹாரிகாவின் எம்பிபிஎஸ் கௌன்சலிங்கிற்காக ஞாயிறு அன்று விஜயவாடா வந்துள்ளார். கவர்னர் பேட்டையில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய அவர்கள் கனகதுர்கா அம்மனை தரிசிப்பதற்கு ஆட்டோவில் சென்றார்கள்.

கோவில் தரிசனத்திற்கு செல்லும் அவசரத்தில் பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டுச் சென்றார்கள். தரிசனத்துக்குப் பிறகு தான் பணப் பை காணாமல் போன விஷயத்தை அறிந்தார்கள். ஆட்டோவில் விட்டு விட்டு வந்து விட்டோம் என்று உணர்ந்த கோதண்டராம் உடனே போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் ஏறிய ஆட்டோவின் எண் தெரியாததால் சற்று நேரம் குழம்பியுள்ளனர்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

இந்நிலையில், அவர் ஏறிய ஆட்டோ பயணித்த வழிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் பரிசோதித்து பார்த்தனர். கோதண்டராம் ஏறிய ஆட்டோவின் பின்னால் ஆத்ம பந்து என்று எழுதிய போஸ்டர் காணப்பட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் அந்த ஆட்டோவை கண்டு பிடிக்க முயன்றனர்.

அதே நேரம், மாலை 4 மணிக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் தன் வீட்டிற்குச் சென்ற பின் ஆட்டோவில் ஒரு பை இருப்பதைப் பார்த்தார். அதனைத் திறந்து பார்க்கையில் பெருமளவில் பணமும் சில சான்றிதழ்களும் இருப்பதைக் கண்டார். உடனே இன்னும் சில ஆட்டோ டிரைவர்களையும் அழைத்துக் கொண்டு, ஒன்டௌன் காவல் நிலையம் சென்றார். அங்கே காவலர்களிடம் தன் ஆட்டோவில் பயணி தவற விட்டது என்று கூறி பையை ஒப்படைத்தார்.

இதை அடுத்து, எஸ்ஐ காசிவிஸ்வநாத் முன்னிலையில் வெங்கடேஷ் அந்தப் பையை கோதண்டராமிடம் அளித்தார். பயணி தவற விட்ட பொருளை தாமாகவே முன் வந்து, திரும்பக் கொடுத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டிய போலீசார் வெகுமதி அளித்தனர்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories