சந்திரயான்-2 வெற்றி! இளைஞர்களை ஊக்கப்படுத்தும்: மோடி பெருமிதம்!

modi chandrayaan - 2026

சந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு தங்களது பாராட்டுகள் என்றும் இஸ்ரோவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்திரயான் 2 வெற்றிக்காக நாடாளுமன்றத்தில் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சந்திரயான் -2 வெற்றி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது! விஞ்ஞானிகள், பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய திட்டங்களை முன்னெடுப்பதில் இஸ்ரோ, ஆசானாக இருக்க வேண்டும்!

சுமார் 50 நாட்களில் நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 2 அடையும்! புதிய கண்டுபிடிப்புகளுக்கு அது வழிவகுக்கும்! அறிவுசார் அமைப்புகளை இத்திட்டம் வளப்படுத்தும்! சந்திரயான்-2 வெற்றிக்கு ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

சந்திரயான் 2 வெற்றி குறித்து இரண்டு புகைப்படங்களுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தருணத்தில், தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று, கைகளைக் கட்டியபடி, தனது அறையில் உள்ள பெரிய திரையில் விஞ்ஞானிகளுடன் தானும் டென்ஷனுடன் அந்த நிகழ்வை நோக்குவதைக் காட்டும் வகையில் ஒரு படமும், கைத்தட்டி பாராட்டும் ஒரு படமும் என தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு தனது வாழ்த்துகளை குரல் ஒலிப்பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், வரலாற்றின் சிறப்பான தருணங்கள். அறிவியலின் புதிய எல்லையை அளக்க விரும்பும் 130 கோடி இந்தியர்களின் உறுதியையும், விஞ்ஞானிகளின் வலிமையையும் சந்திரயான் 2 காட்டுகிறது. அறிவியல், உயர் தர ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இளைஞர்களை சந்திரயான் 2 ஊக்கப்படுத்தும் என்று தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories