சந்திரயான்-2 வெற்றி! இளைஞர்களை ஊக்கப்படுத்தும்: மோடி பெருமிதம்!

modi chandrayaan - 2026

சந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு தங்களது பாராட்டுகள் என்றும் இஸ்ரோவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்திரயான் 2 வெற்றிக்காக நாடாளுமன்றத்தில் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சந்திரயான் -2 வெற்றி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது! விஞ்ஞானிகள், பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய திட்டங்களை முன்னெடுப்பதில் இஸ்ரோ, ஆசானாக இருக்க வேண்டும்!

சுமார் 50 நாட்களில் நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 2 அடையும்! புதிய கண்டுபிடிப்புகளுக்கு அது வழிவகுக்கும்! அறிவுசார் அமைப்புகளை இத்திட்டம் வளப்படுத்தும்! சந்திரயான்-2 வெற்றிக்கு ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

சந்திரயான் 2 வெற்றி குறித்து இரண்டு புகைப்படங்களுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தருணத்தில், தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று, கைகளைக் கட்டியபடி, தனது அறையில் உள்ள பெரிய திரையில் விஞ்ஞானிகளுடன் தானும் டென்ஷனுடன் அந்த நிகழ்வை நோக்குவதைக் காட்டும் வகையில் ஒரு படமும், கைத்தட்டி பாராட்டும் ஒரு படமும் என தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு தனது வாழ்த்துகளை குரல் ஒலிப்பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், வரலாற்றின் சிறப்பான தருணங்கள். அறிவியலின் புதிய எல்லையை அளக்க விரும்பும் 130 கோடி இந்தியர்களின் உறுதியையும், விஞ்ஞானிகளின் வலிமையையும் சந்திரயான் 2 காட்டுகிறது. அறிவியல், உயர் தர ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இளைஞர்களை சந்திரயான் 2 ஊக்கப்படுத்தும் என்று தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories