January 25, 2025, 8:42 AM
23.2 C
Chennai

3 நாடுகள் பயணம் முடித்து நாடு திரும்பினார் மோடி

modi-harpper புது தில்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளில் 9 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று தாயகம் திரும்பினார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு. தலைநகர் தில்லியில் பா.ஜ,க தலைவர்களும் ஆதரவாளர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, கடந்த வாரம் பிரான்ஸுக்குச் சென்று, பின்னர் ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் மோடி. வெள்ளிக்கிழமை நேற்று தனது பயணத்தை நிறைவு செய்து, பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் இருந்து தாயகம் புறப்பட்டார். கனடாவில் இருந்து இந்தியா புறப்படும் முன்பாக டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்தபோது, கனடாவில் இருந்து திருப்தியுடன் புறப்படுகிறேன். இந்தப் பயணம், இந்தியா-கனடா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும். கனடா நாட்டு மக்களுக்கு நன்றி.

சிறந்த மனிதரும், அருமை நண்பருமான கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.  

மோடியின் இந்தப் பயணத்தில், பிரான்ஸூடன் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம், ஜெய்தாப்பூரில் அணு மின் திட்டத்தை தொடங்குவது உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜெர்மனியுடன் இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 டன் யுரேனியத்தை கனடா வழங்குவதற்கான ஒப்பந்தமும், மோடியின் இந்த பயணத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சபரிமலை நடை அடைப்பு; மீண்டும் நவ. 15ல் மண்டல பூஜைக்காக திறப்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.