January 25, 2025, 9:01 AM
25.3 C
Chennai

மேகதாதுவை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் பந்த்

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது, தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பதிலுக்கு தமிழகத்தைக் கண்டித்து கர்நாடகத்தில் சனிக்கிழமை இன்று முழு அடைப்புப் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதற்கு கர்நாடக அரசு ஊழியர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் உள்பட மாநிலத்தில் உள்ள 400-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இன்று பெரும்பாலான பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்றும், அரசு அலுவலகங்களும் இயங்காது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அரசு ஆதரவு இல்லை என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அசம்பாவித சம்பவங்கள், வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலை மகரஜோதி; ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.