வெள்ளப்பெருக்கு,நிலச்சரிவு,போக்குவரத்து பாதிப்பு : கனமழையால் தென்னிந்தியா படும் துயர்கள் ! !

கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினால் தென்னிந்திய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசின் சார்பில் இந்திய விமானப் படையின் உதவி கோரப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு பகுதிகள் கன மழையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் குடகு பகுதியில் மழை தொடர்பான பகுதிகளில் உயிரிழப்பு 25 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர, நிலச்சரிவில் பலரும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று கருதி மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

தாழ்வான பகுதிகளிலும், ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களும் பத்திரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

மகாராஷ்டிராவில் அணைகள் நிரம்பி, மதகுகள் திறக்கப்பட்டிருப்பதால், கிருஷ்ணா கரையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களும், பெலகாவி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரும்பாலான ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

கபினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மைசூரு – ஊட்டி இடையேயான நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளது. ஹசன், உத்தர கன்னடா, குடகு, பெலகாவி மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, கொச்சி விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஓடுபாதையில் வெள்ளம் தேங்கியிருப்பதால் கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 11ம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

நன்றி : வீடியோ : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories