February 13, 2025, 11:49 AM
25.6 C
Chennai

கெரகம் புடிச்சவனுக… ஒரு பொங்கலக்கூட நிம்மதியா கொண்டாட வுடமாட்றானுங்க!

goundamani-senthil
goundamani-senthil

அண்ணே, சமத்துவப் பொங்கல் கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் ரெடி, வாங்கண்ணே ஓரெட்டு போயிட்டு வந்துடலாம்.

ஆமா, அதென்ன சமத்துவ பொங்கல்? பொங்கப் பானையிலே
போட்டி யும் ஈரலும் போட்டு பொங்கப் போறியா?

திஸ் இஸ் டூ மச் ண்ணே, என்ன பேசுறீங்க?

தெரிஞ்சு தான்டா பேசுறேன் பெருச்சாளி க்குப் பொறந்தவனே.

பொங்கல் ன்னா என்ன?

கெழக்காம சூரியனப் பாத்து அடுப்பு வச்சு
அடுப்பு க்கு அரணா
மூனு கரும்ப நிக்க வச்சு
பானையிலே திருநீறு பூசி
மஞ்சக்கெழங்க நூல்லகட்டி
பானையோட கழுத்துல ஏத்தி
பச்சரிசி வெல்லம்
ஏலக்கா முந்திரி திராட்சை நெய்யி
இதெல்லாம் சேத்து
பொங்குறப்ப குலவை சத்தம் போட்டு
பொங்கலோ பொங்கல் ன்னு குரல குடுத்து,
மொத அகப்பைய சாமிக்கு படைக்கோனும்.

அதுசரி டா, இதுதானே பொங்கல்?

என்னண்ணே இவ்வளவு வெலாவாரியா தம்கட்டி சொல்றேன்
நக்கல் பண்ணிகிட்டு?

அதில்லடா அர மண்டையா, இப்போ, பாய்வீட்ல விஷேசம்ன்னா என்ன செய்வாங்க?

அண்ணே, ரம்ஜானு பக்ரீத்து மிலாடி நபின்னு பிரியாணி செஞ்சு அசத்துவாங்கண்ணே.

அதுசரி கிருஸ்துவங்க வீட்ல?

அவங்களும் அப்பிடித்தான்ணே கிருஸ்துமஸ் கேக்கு ஈஸ்டருக்கு
பாஸ்டரு பேஸ்ஸா டேஸ்ட்டா கேக்கும் பிரியாணி யும் செய்வாங்க
நானும் சாப்ட்ருக்கேனே.

அதுசரிடா சோத்துக்கு செத்தவனே, அவங்கள்லாம் எப்பவாவது
சமத்துவ பிரியாணி சமத்துவ கேக் ன்னு செஞ்சு பார்த்திருக்கியா,
இல்லே பொங்கலத்தான் இப்ப நீ சொன்னியே தம்கட்டி, அப்பிடி செய்வாங்களா? அவங்க அவங்களோட வழக்கப்படி என்ன செஞ்சாலும் நாம சாப்ட்டு நல்லா இருக்கு பாயம்மா அருமையா இருக்கு மேரியம்மா ன்னு மனசார பாராட்றோம்ல்லே, நீ பொங்கி படச்ச பொங்கல அவங்களுக்கு குடுத்தா அதேமாதிரி சாப்ட்டு சந்தோசப்படுவாங்களா?

அது வந்து ண்ணே அவங்க வாங்கவே மாட்டாங்ங்ங்ககக,

அப்புறம் என்னடா சமத்துவ பொங்கலு சவரப்பெட்டி செங்கலுன்னு? நாயே ஓடிப்போயிடு நின்னியின்னா அடிச்சே கொன்னுடுவேன், கெரகம் புடிச்சவனுக ஒரு பொங்கலக்கூட நிம்மதியா கொண்டாட வுடமாட்றானுங்கடா?

  • சமூகத் தளப் பகிர்வு

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories