கல்யாண வீடுன்னா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும்…இது எஜமான் படத்தில் நெப்போலியன் அடிக்கடி சொல்லும் வசனம்..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நேற்று எஜமான் கெட்டப்பில் வந்து இறங்கிய மோடிக்கு சாலப்பொருந்துகிறது..நிஜமான எஜமான் ..
நிலா,கடல்,யானை வரிசையில் மோடியை தாராளமாக சேர்த்து விடலாம் போலிருக்கிறது..தோள் கண்டார் தோளே கண்டார் போல மோடி கண்டார் மோடியே கண்டார்..சுற்றி எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர் மட்டுமே தனித்து தெரிவது தான் அவரின் ஸ்பெஷாலிட்டி..
அமெரிக்காவிலேயே அதகளம் செய்தவர் தாய்மண்ணில் சும்மா விட்டுவிடுவாரா, தூள் கிளப்புகிறார்..ஸ்டைல் மன்னன் ரஜினியின் தேசத்தில் அவரை விட ஸ்டைலாக வேட்டியில் வந்து இறங்குகிறார் பிரதமர். ஆர்ப்பரிக்கிறது தமிழகம்..நீ அணிந்தால் வேட்டி அழகு என்று பாட தோன்றுகிறது..
சுற்றி கேமராக்கள் இருப்பதால் அவர் நடிக்கிறார் என்று அடிவயிறு பற்றி எரிவோர் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் எத்தனை சிறந்த கலைஞனாக இருந்தாலும் 24 x 7 ஒரு மனிதனால் நடித்துக்கொண்டிருக்க முடியாது..
ஒன்று வேண்டுமானால் சொல்லலாம்.. வேட்டி சட்டை அணியவேண்டும் என்ற முடிவிலிருந்து மஹாபலிபுரம் கோவிலின் சிறப்பான நுணுக்கங்களை அறிவது வரை அவர் முன்திட்டமிடல் செய்திருக்கிறார்..அது அவரது திறமை, இதில் குறைகாண என்ன இருக்கிறது?
சீன அதிபரிடம் ஒவ்வொரு இடத்தையும் விளக்கி சொல்கையில் அவர் முகத்தில் தான் எத்தனை பெருமிதம்..இந்த முழு தேசமும் தன்னுடையது என்று அவர் உணர்வு பூர்வமாக நம்புகிறார். இது பாரம்பரியமும் பெருமையும் கொண்ட தேசம் என்று உலகிற்கு பறைசாற்ற நினைக்கிறார். அதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர் பயன்படுத்த தவறுவதில்லை.
இதனால், இதற்காக தான், இந்த தேசத்தை அடியாழத்திலிருந்து நேசிப்பதால் தான் மோடி என்ற மாமனிதர் மீது இத்தனை பேர் பித்துக்கொண்டு அலைகிறோம்…இவரை வெல்லவேண்டுமானால் இவரினும் மேலாக இந்த தேசத்தை நேசிப்பவன் வேண்டும்.. அதற்கு ஒருவன் இனி பிறந்து தான் வரவேண்டும்.. Love you Modiji..ஜெய் ஹிந்த்!!!
- V. வெங்கடேஷ் (சிங்கப்பூர் )