தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் பாதிக்கப் பட்டனர். பலர் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், பலர் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.
இந்தப் புயலில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் நோக்கி, ரஜினி மக்கள் மன்றத்தினரும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். அப்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து 6 லாரிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

அப்போது, ரஜினி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி தற்போது நாகை மாவட்டத்தில் கோடியக்கரை, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவசமாக வீடு கட்டப்பட்டுள்ளது.

புயலால் வீடிழந்து பாதிக்கப்பட்டவர்களை ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்காகக் கட்டப் பட்ட வீடுகளின் சாவிகளை வழங்கினார்.




