தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை சனிக்கிழமி அன்று, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை 662 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு, தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 7 சிறிய கப்பல்களில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். மீனவர்கள் வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். பின்னர் மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். பகல் முழுதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அந்தப் பகுதியில் இருந்து சென்றதும் கடலில் வெட்டி வீசப்பட்ட வலைகளை சேகரித்து ஞாயிறு காலை மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

