தமிழக அரசின் செய்தி–மக்கள் தொடர்புத் துறையின் இணையதளத்தில் முதலமைச்சர் பொறுப்பில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருப்பதற்கு யார் காரணம் என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறிய பிறகு, தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத் தயார் என்றும், ஜாமீனில் விடுவித்தால் போதும் என்றும் உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்ததோடு, ஜாமீன் கிடைத்த பிறகு, நாரிமன் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முயன்று பார்க்க நேரம் கிடைக்காத நிலையில், ஜெயலலிதா என்னென்ன நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். தமிழக அரசின் செய்தி–மக்கள் தொடர்புத்துறையின் இணையதளத்தில் இன்றைய தினத்தில் தமிழக அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் யார் என்பதற்கு ஜெயலலிதா, தமிழ்நாடு முதலமைச்சர் என்றும்; ஓ.பன்னீர்செல்வம், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் என்றும் தான் இன்றளவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு இணையத்தில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருக்கக் காரணம் யார்?: கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari