டாஸ்மாக் விபரீதம் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை!

women - 2026

மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்

சென்னை நம்மாழ்வார் பேட்டை பாரக் 2-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன். 52 வயதான இவர் கட்டடத் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.

லோகநாதனுக்கு இரண்டு மகன்கள் 19 வயதில் ஒரு மகள். மூத்த மகனுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்! லோகநாதன் இளைய மகன் மகள் ஆகியோர் அவர்களது சிறிய வீட்டில் வசித்து வந்தனர்.

லோகநாதன் தன் மகளை எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தி உள்ளார். அதன் பிறகு மகளை வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே முடங்கி வைத்துள்ளார். சில ஆண்டுகளாக அவர் மகளுக்கு மனநலம் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லோகநாதன் மது போதையில் இருந்ததை அவரது இளைய மகன் கண்டித்து விட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். மேலும் தனது தந்தை போதையில் இருந்தால் வீண் தகராறு செய்வார்; அது வழக்கம் என்பதால் இதுகுறித்து தனது அண்ணனிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.

இதனால் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தங்கைக்கு ஏதாவது ஆபத்து நேரிடலாம் என்று நினைத்த லோகநாதனின் மூத்த மகன் மதியம் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது லோகநாதன் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் லோகநாதனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். லோகநாதன் மகனை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தலைமைச் செயலக குடியிருப்பு மகளிர் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தப்பா 48 வயதான அய்யாவு என்பவரும் அவரது மகன் மணி (23 வய) ஆகியோரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories