நிபந்தனையின்றி பாஜகவில் இணைகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா – எடியூரப்பா பரபரப்பு தகவல்

பெங்களூர்:

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த சில நாட்களுக்கு முன், காங்கிரசில் இருந்து விலகினார். அப்போது, அவர் 'அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டேன்' என அதிரடியாக அறிவித்தார்.

இதைதொடர்ந்து அவர் பா.ஜ.க.வில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், பா.ஜ.க. தலைவர்கள், எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்ந்து தங்களது கட்சியில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.

தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டு பாராட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பாவை, எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைவேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டன. விரைவில் எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் இணைவார் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூராப்பா கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் சேருவது பற்றி பேச்சு வார்த்தை நடத்தினோம். மீண்டும் ஒருமுறை அவருடன் பேசிய பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைவது உறுதியானது. எந்த நிபந்தனையும் இல்லாமல், அவர் எங்களது கட்சியில் இணைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories