சென்னை: தமிழகத்தில் உள்கட்டமைப்புத் துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என சீன தூதரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசென் தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது மே மாதம் சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சீன தொழிலதிபர்கள் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்தார். இதேபோல் சீனா வருமாறு முதல்வருக்கு சீன தூதர் அழைப்பு விடுத்தார். மேலும், சென்னையில் சீன நாட்டின் துணை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் என அந்நாட்டு தூதர் தெரிவித்ததாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புக்கு முதலீடு செய்ய சீன தூதரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari