சென்னை:
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதிய முதல்வர் குறித்து அவர் கூறுகையில், தற்போது மக்கள் விரோத ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.



