December 6, 2025, 11:32 AM
26.8 C
Chennai

சாமுண்டி மலையில் கேமரா பொருத்த போலீஸ் முடிவு

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் சிசிடிவி கேமரா பொருத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மைசூரு சாமுண்டி மலையில் கடந்த திங்கட்கிழமை மாலை ஜெர்மன் நாட்டைச் சேர்நத பெண் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து சாமுண்டி மலையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொர்பாக கமிஷனருக்கும் சாமுண்டி போலீசார் மனு அளித்துள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் தொல்லைக்குள்ளான சம்பவத்தில் சாமுண்டி மலைப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை உண்மையான குற்றவாளி யார் என போலீசார் கண்டுபிடிக்கவில்லை. 
மேலும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க சாமுண்டி மலைப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தலாம் என்று போலீசார் ஆலோசித்தனர். எந்தெந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமரா தேவை என்பது குறித்து சாமுண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆய்வு நடத்தினார். சாமுண்டி மலை படிக்கட்டு தொடங்கும் இடத்தில் ஒரு சி.சி.டி.வி. கேமரா மற்றும் நடுப்புறத்தில் ஒரு சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படவுள்ளது. ஜெர்மன் பெண் பாலியல் தொல்லைக்குள்ளான நந்தி சிலை அருகே ஒரு சிசிடிவியும், மாநகரின் இயற்கையை ரசிக்க உள்ள வியூ பாயிண்ட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளது. மேலும் குற்றச் செயல்களைத் தடுக்க மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை படிக்கட்டு வழியாக கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 மணிக்கு மேல் படிக்கட்டு வழியாக பக்தர்கள் சாமுண்டியை தரிசனம் செய்ய வருவார்கள். இதற்காக காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை படிக்கட்டு பகுதி திறந்திருக்கும். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே இப்பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். பக்தர்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.சி.க்கு அனுப்பியுள்ள அறிக்கைக்கு ஓரிரு நாட்களில் பதில் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories