ஆர்.கே.நகர் இடைதேர்தலோடு சசிகலா தரப்பினரை அரசியில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்று முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைதேர்தலை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறனர். இந்நிலையில், இன்று தனது ஆதரவு நிர்வாகிகளிடையே பேசிய ஓபிஎஸ்,
"கடந்த 24 ஆம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூடிய கூட்டம் அ.தி.மு.க.,வின் பெரும்பாலான தொண்டர்கள் நம்மிடம்தான் உள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது என கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொகுதிக்குள் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரையும், தங்கள் பக்கம் கொண்டு செல்ல, பல லட்சங்களை அலட்சியமாக சசிகலா தரப்பினர் செலவு செய்ததாகவும் ,பணம் வாங்கிச் சென்ற யாராலும், அதை செய்ய முடியவில்லை.
ஆர்,கே.நகர் தொகுதியில் 32 அமைச்சர்களையும், களம் இறக்கி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, மக்களை விலைக்கு வாங்க சசிகலா தரப்பினர் திட்டம் போடுவார்கள். சசிகலா தரப்பின் அத்தகைய முயற்சிகளை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் தி.மு.க.,வையும் சேர்த்து முறியடிக்க வேண்டும்.
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா தேர்தலில் நின்றால் அவரை விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்த ஓபிஎஸ் முடிந்த வரையில், அவரை இணைத்துக் கொண்டே தேர்தலை சந்திக்க முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நமது ஒரே இலக்கு இந்த இடைத் தேர்தலோடு சசிகலா தரப்பை, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும்.
அதிமுக வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் இரட்டை இலைச் சின்னம் நம் கைக்கு வந்துவிடும் என்றும் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்தார்.



