தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவை ஆர்.கே.நகரில் வேட்பாளராக்கி இருந்தால் எம்ஜிஆரின் மகளை எதிர்க்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யவும் தன் மீதான எதிர்ப்பு வாக்குகளை சிதறாமலும் செய்திருக்கலாம் என சசிகலா கருதுகிறார். தன்னை சந்திக்க வந்தவர்களிடம் இதை தான் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தினகரன் தன் பேச்சை கேட்காமல் ஜோதிடர் ஒருவர் சொன்னார் என்பதற்காக தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டுள்ளார் என செம கடுப்பில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.



