இதுக்குதான் அவரு பதவி ஏத்ததும்… சுவரு ஏறிக் குதிச்சி ஓடினாரு..!

tuticorin local municipal councilor - 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பதவி ஏற்றதும் ஒரு சுயேட்சை கவுன்சிலர் சுவர் ஏறிக் குதித்து தப்பித்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். இதற்குக் காரணம், தன்னை கடத்தி விடுவார்கள் என்ற பயம் தானாம்!

இன்று, கோவில்பட்டியில் ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், அவர்களை திமுக.,வினர் வேனில் கடத்திச் சென்றதாக அதிமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 19 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக – 8, இ.கம்யூ., – 1, அதிமுக – 5, தேமுதிக – 1, சுயேட்சை – 4 இடங்களில் வெற்றி பெற்றனர். ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்கள் தேவை என்பதால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை கணக்கு செய்தன.

இரு தரப்பினரும் சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் இன்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்த ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில், சுயேட்சை வேட்பாளர்கள் பதவியேற்றதும் அவர்களை திமுக.,வினர் வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டையபுரம் சாலையில் அதிமுக, தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது போன்ற நிலை தனக்கு வந்துவிடக் கூடாது என்றுதான், முன் ஜாக்கிரதையாக ஒரு கவுன்சிலர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சுவர் ஏறிக் குதித்து ஓட்டம் பிடித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 8 வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்ட இன்ஜினியர் அரவிந்த், வெற்றி பெற்று, இன்று பதவியேற்றார். பதவி ஏற்ற கையுடன், அரவிந்த், தன்னை கடத்தி விடுவார்களோ என பயந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதைக் கண்டு பலர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories