spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை!

தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை!

- Advertisement -
darbar

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை, மலேசியாவில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்பார் படம், ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது,. இந்த நிலையில் அந்தப் படத்திற்கு தடைவிதிக்க கோரி, மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேசன்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த நிறுவனம் அளித்த புகார் மனுவில் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்து வெளியான 2.O படத்திற்காக, லைக்கா நிறுவனம் தங்களிடம் வாங்கிய 12 கோடி ரூபாயை திருப்பித் தரவில்லை என குறிப்பிட்டிருந்தது.

கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து, 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும், எனவும் அதுவரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், எனவும் கோரியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தர்பார் படத்தை மலேசியாவில் மட்டும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு, 4 கோடியே 90 ஆயிரம் ரூபாயை செலுத்தும் பட்சத்தில் ஜனவரி 9ஆம் தேதியே தர்பார் படத்தை மலேசியாவிலும் வெளியிடலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe