ஏப்ரல் 1ம் தேதி துவங ்குகிறது மயிலை அறுபத்துமூவர் விழா

63 saints festival in mylapore kapaleeswarar temple - 2026

சென்னை:

சென்னை, புராதனமான நகரம். சிறு சிறு கிராமங்களின் தொகுப்புதான் இன்றைய சென்னை. சென்னையின் மிகப் பழைமையான விழாவாக மயிலாப்பூர் பங்குனித் திருவிழாவைச் சொல்வார்கள். கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்பது இத்தலத்தின் சிறப்பு.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1ம் தேதி துவங்கி, ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 
ஆலயத்தின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாட்டுடன் துவங்கிய இவ்விழாவின் கொடியேற்றம் ஏப்.2ம் தேதி நடைபெறுகிறது. அதிகார நந்தி காட்சியைத் தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி வெள்ளி புரூஷா மிருக வாகனம், சிங்கம் புலி வாகனங்களில் பெருமான் வீதியுலா, மறுநாள் வெள்விடை பெருவிழாக்காட்சி, 7ம் தேதி ஐந்திருமேனிகள் யானை வாகனங்கள் உலா நடைபெறுகிறது. 
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் ஏப்ரல் 8ம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் துவங்குகிறது. மறுநாள், திருஞான சம்பந்தர் எழுந்தருளலும், என்பைப் பூம்பாவையாக்கி அருளலும் நடைபெறும். தொடர்ந்து மாலை வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் எழுந்தருளும் காட்சி நடைபெறும். 
மயிலாப்பூர் திருவிழா எனப் போற்றப்படும் இவ்விழாவைக் காண, பெருந்திரளான பக்தர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கே வந்து, மயிலை நகரெங்கும் கூடுகிறார்கள். மாட வீதிகளில் வலம் வரும் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் மரியாதை செய்து, வணங்கி பெருமான் அருள் பெறுகின்றனர். 
ஏப்ரல் 11ம் நாள் செவ்வாய் அன்று புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல் விழாவும், தொடர்ந்து திருக்கல்யாணம், கயிலாய ஊர்தி ஆகியவையும் நடைபெற்று, சண்டேஸ்வரர் விழாவுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 13ம் நாள், விழா நிறைவுறுத் திருமுழுக்கு நடைபெறும். பங்குனிப் பெருவிழாவின் பத்து நாட்களும் பகல் இரவுக் காலங்களில் ஐந்திருமேனிகள் திருவீதியுலா வருதல் சிறப்பாகும். 

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories