ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனக்கூறிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விளைவுகளை பாகிஸ்தானில் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில், இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது.
*கோரிக்கை:*
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது: ஜாதவை பாகிஸ்தான் தூக்கில் போட்டால், அது கொலையாக தான் இருக்கும். அவரை விடுவிக்காவிட்டால், மத்திய அரசு பலவீனமான அரசாக மாறிவிடும் என்றார்.
எம்ஐஎம் கட்சியின் ஓவாய்சி கூறியதாவது: அரசுக்கு அனைத்து அதிகாரமும் செல்வாக்கும் உள்ளது. அதனை அரசு பயன்படுத்த வேண்டும். ஜாதவை அரசு காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமா? அவரை காப்பாற்ற வேண்டியது நமது கூட்டு பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
*கடத்தல்:*
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், ஜாதவ் விவகாரத்தில், அடிப்படை சட்டம் மற்றும் நீதி மீறப்பட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதவ், முறையான பாஸ்போர்ட் வைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. அவர் ஈரானில் சிறு தொழில் செய்து வந்தார். அங்கு ஜாதவ் கடத்தப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
*கேலிக்கூத்து:*
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில், ஜாதவ் பெற்றோருடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அவரை விடுதலை செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஜாதவ் இந்தியாவின் மகன். அவரை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமாகவும், விசாரணை கேலிக்கூத்தாகவும் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளுங்கள். ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எந்த விலை கொடுத்தாவது அவரை மீட்டு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories