ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனக்கூறிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விளைவுகளை பாகிஸ்தானில் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில், இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது.
*கோரிக்கை:*
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது: ஜாதவை பாகிஸ்தான் தூக்கில் போட்டால், அது கொலையாக தான் இருக்கும். அவரை விடுவிக்காவிட்டால், மத்திய அரசு பலவீனமான அரசாக மாறிவிடும் என்றார்.
எம்ஐஎம் கட்சியின் ஓவாய்சி கூறியதாவது: அரசுக்கு அனைத்து அதிகாரமும் செல்வாக்கும் உள்ளது. அதனை அரசு பயன்படுத்த வேண்டும். ஜாதவை அரசு காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமா? அவரை காப்பாற்ற வேண்டியது நமது கூட்டு பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
*கடத்தல்:*
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், ஜாதவ் விவகாரத்தில், அடிப்படை சட்டம் மற்றும் நீதி மீறப்பட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதவ், முறையான பாஸ்போர்ட் வைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. அவர் ஈரானில் சிறு தொழில் செய்து வந்தார். அங்கு ஜாதவ் கடத்தப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
*கேலிக்கூத்து:*
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில், ஜாதவ் பெற்றோருடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அவரை விடுதலை செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஜாதவ் இந்தியாவின் மகன். அவரை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமாகவும், விசாரணை கேலிக்கூத்தாகவும் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளுங்கள். ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எந்த விலை கொடுத்தாவது அவரை மீட்டு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories