December 6, 2025, 4:01 AM
24.9 C
Chennai

ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனக்கூறிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விளைவுகளை பாகிஸ்தானில் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில், இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது.
*கோரிக்கை:*
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது: ஜாதவை பாகிஸ்தான் தூக்கில் போட்டால், அது கொலையாக தான் இருக்கும். அவரை விடுவிக்காவிட்டால், மத்திய அரசு பலவீனமான அரசாக மாறிவிடும் என்றார்.
எம்ஐஎம் கட்சியின் ஓவாய்சி கூறியதாவது: அரசுக்கு அனைத்து அதிகாரமும் செல்வாக்கும் உள்ளது. அதனை அரசு பயன்படுத்த வேண்டும். ஜாதவை அரசு காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமா? அவரை காப்பாற்ற வேண்டியது நமது கூட்டு பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
*கடத்தல்:*
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், ஜாதவ் விவகாரத்தில், அடிப்படை சட்டம் மற்றும் நீதி மீறப்பட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதவ், முறையான பாஸ்போர்ட் வைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. அவர் ஈரானில் சிறு தொழில் செய்து வந்தார். அங்கு ஜாதவ் கடத்தப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
*கேலிக்கூத்து:*
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில், ஜாதவ் பெற்றோருடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அவரை விடுதலை செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஜாதவ் இந்தியாவின் மகன். அவரை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமாகவும், விசாரணை கேலிக்கூத்தாகவும் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளுங்கள். ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எந்த விலை கொடுத்தாவது அவரை மீட்டு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories