இடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா?

thirumavalavan stalin - 2026

தலித்களுக்கான இட ஒதுக்கீடும் காங்கிரசும்!

அரசுப் பணிகளில் உள்ள பட்டியலினத்தவரின் பதவி உயர்வில் மாநில அரசுகள் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல, மாநில அரசுகள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவற்றை நீதிமன்றம் ஆணையிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்திருக்கிறது.

இதற்குக் காரணம் உத்ரகண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறப்பித்த ஆணைதான். அதைக் குறித்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இப்படித் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நேரத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த இன்னொரு தீர்ப்பு நினைவுக்கு வருகிறது. 2018ல் அப்போது கர்நாடகத்தை ஆண்ட ஜ.த (ம)- காங்கிரஸ் அரசு 5000 பட்டியிலனத்தவவரைப் பதவியிறக்கம் செய்து அந்த இடத்தில் பொதுப்பிரிவினரை நியமித்தது. இது தொடர்பான வழக்கில் 2018 செப்டம்பர் 26 அன்று உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் பட்டியலினத்தவ்ருக்கு (SC15% ST3%) இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்ப்ளித்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் (பாஜக அரசு) வாதிட்ட அட்டார்னி ஜெனரல் கே கே வேணுகோபால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று வாதிட்டார்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்திரா சஹானி வழக்கின் காரணமாக பட்டியலினத்தவரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்ட போது அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய். அத்தோடு நிரப்பப்படாமல் இருந்த காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த போதும் அம்பேத்கருக்கு பாரதரத்தினா வழங்கவில்லை. அதன் கூட்டணிக்கட்சித் தலைவரான எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட போதும் அம்பேத்கருக்கு அது வழங்காமல் தவிர்த்து வந்தது. அவருக்கு பாரத ரத்தினா வழங்கி கெளரவித்தது வாஜ்பாய் அரசுதான்

சட்டமியற்றும் மன்றங்களில் (சட்டமன்றம், நாடாளுமன்றம்) பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று சட்டம் இயற்றியது மோதியின் அரசு

அம்பேத்கரின் உரைகளையும் எழுத்துக்களையும் ஆராய்வதற்காக தில்லியில் 15, ஜன்பத்தில், சர்வதேசத் தரத்தில் நவீன தொழில் நுடபத்துடன் கூடிய State of art ஆய்வு மையம் (Dr. Ambedkar International center) அமைத்ததும் மோதி அரசுதான்

லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை மூன்று மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கி நினைவகம் அமைத்தது மகராஷ்டிரத்தை ஆண்ட பாஜக அரசு.

போனதெல்லாம் போகட்டும் . இனியாவது பட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா?

  • மாலன் நாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories