December 6, 2025, 3:18 AM
24.9 C
Chennai

சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்! எடப்பாடியின் அதிரடி பேச்சு!

Chief Secretariat - 2025

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டப்பேரவைத் தலைவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்!

சபாநாயகர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முன்னதாக, இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில், சட்டப் பேரவையை நோக்கி லட்சக்கணக்கானோரை திரட்டி, முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறியிருந்தன. இந்த நிலையில், சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டப் பேரவைத் தலைவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வண்ணாரப்பேட்டையில் இச்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வரும் தேசவிரோத, சட்ட விரோதப் போராட்டம் குறித்து பேரவையில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதியவர் இறந்ததாக மாநிலம் முழுவதும் வதந்தி பரப்பி கலவரத்தை உருவாக்க நினைத்தார்கள்! அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறை நிகழ்வுகளை உருவாக்க சில கட்சிகள் திட்டமிட்டுள்ளது என்று சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு நிகழ்ச்சியில் காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி, மறைமுகமாக திமுக., குறித்து பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தப் பட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

edappadi palanisamy - 2025

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது, இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது என்றும், போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றும் கூறினார்.

வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories