சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்! எடப்பாடியின் அதிரடி பேச்சு!

Chief Secretariat - 2026

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டப்பேரவைத் தலைவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்!

சபாநாயகர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முன்னதாக, இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில், சட்டப் பேரவையை நோக்கி லட்சக்கணக்கானோரை திரட்டி, முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறியிருந்தன. இந்த நிலையில், சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டப் பேரவைத் தலைவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வண்ணாரப்பேட்டையில் இச்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வரும் தேசவிரோத, சட்ட விரோதப் போராட்டம் குறித்து பேரவையில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதியவர் இறந்ததாக மாநிலம் முழுவதும் வதந்தி பரப்பி கலவரத்தை உருவாக்க நினைத்தார்கள்! அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறை நிகழ்வுகளை உருவாக்க சில கட்சிகள் திட்டமிட்டுள்ளது என்று சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு நிகழ்ச்சியில் காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி, மறைமுகமாக திமுக., குறித்து பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தப் பட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!
edappadi palanisamy - 2026

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது, இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது என்றும், போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றும் கூறினார்.

வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Topics

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Entertainment News

Popular Categories