மோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்!

President Ram Nath Kovind and Prime Minister Narendra Modi 770x433 1 - 2026

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் முதல் நபராக இடம் பெறுகிறார்.

தில்லி மாநகராட்சியில் வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் தேசிய மக்கள்தொகை பதிவிற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பெயராக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பெயர் சேர்க்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு என வரிசைக் கிரமமாக பெயர்களும் விவரங்களும் சேர்க்கப்படவுள்ளன.

இதன் தொடக்க நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்புக் கழக ஆணையர் இப்பணியை தொடங்கி வைக்கிறார். அரசின் 3 துறைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. குடியரசுத் தலைவர் குறித்த கணக்கெடுப்பு உள்துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. கணக்கெடுப்பு கழக ஆணையர் தலைமையிலான குழு அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் பற்றிய விவரக் கேட்பு பதிவுகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு திட்டத்துக்கு தாங்களே முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கும் நேரடியாகவே சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அமைச்சர்களின் வீடுகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.

முன்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட இதே தேசிய குடிமக்கள் மக்கள்தொகை பதிவேட்டுக்கு இப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அதிகாரிகள், அந்த மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளனராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories