5 புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

Published:

edappadi palanisamy - 2026

முதல்வர் பழனிசாமி 5 புதிய வருவாய் வட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

சிங்கம்புணரி, ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், கூத்தாநல்லூர், கயத்தாறு ஆகிய ஊர்களை புதிய வருவாய் வட்டங்களாக முதல்வர் தொடங்கிவைத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தைப் பிரித்து ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு புதிய வட்டம்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தினைப் பிரித்து ஆண்டிமடத்தில் ஒரு புதிய வட்டம்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து கூத்தாநல்லூரில் ஒரு புதிய வட்டம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டங்களை சீரமைத்து கயத்தாரில் ஒரு புதிய வட்டம்,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டத்தினைப் பிரித்து சிங்கம்புணரியில் ஒரு புதிய வட்டம் என மொத்தம் 5 புதிய வட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img