January 21, 2025, 4:10 AM
23.2 C
Chennai

குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: தென்காசி பகுதிகளில் கனமழை!

குற்றாலத்தில் கடும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இன்று மாலை திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குற்றால அருவிக்கு வரும் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

மாலை தொடங்கி இரவு நேரத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் வழிந்தோடியது.

முன்னதாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்… தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று கூறப் பட்டிருந்தது.

ALSO READ:  திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் கடலாடி பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...