திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

meenatchi sundaram theatre sangam - 2026

தமிழக அளவில் 900 திரையரங்குகள் உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றினால், அந்த திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசு தனிக் கவனம் செலுத்தி சுகாதார முறையில், பாதுகாப்பான வழியில் திரையரங்குகளை திறக்க உதவி செய்யுமாறும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவரும், திருச்சி, தஞ்சை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான மீனாட்சி சுந்தரம், கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், திரையரங்கு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, தயாரிப்பாளர்கள் எப்படியும் அந்த திரைப்படங்களை வெளியிட்டு லாபம் பார்க்க வேண்டுமென்றால். அந்த திரையரங்குகள் மூலம் தான் இயங்க முடியும்.

ஆகவே இந்த திரையரங்குகளை நம்பியுள்ள 25 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் அரசு காத்திடவேண்டும். அரசு எப்படி பேருந்து மற்றும் தொடர் வண்டிகளை குறிப்பிட்ட விதிகளின் படி அனுப்ப ஆயத்தமாகின்றதோ, அதே போல, திரையரங்குகளையும், கொரோனா வைரஸ் பரவாமல் மக்களை காத்திடும் பொருட்டு, சுகாதார துறை வழிமுறைகளை பின்பற்றி அரசு இந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

ஒரு திரையரங்கிற்கு சுமார் 3 லட்சம் என்றால் 900 திரையரங்குகளுக்கு பல கோடி ஆகின்றது. மேலும், திரையரங்குகளுக்கு கட்ட வேண்டிய மின்சார தொகை இன்றும் கட்டப்படவில்லை, ஆகவே கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ளார்களே தவிர அந்த மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்படவில்லை.,

ஆகவே மற்றதுறைகளுக்கு எப்படி சலுகைகளுடன் பாதுகாப்புகள் அடங்கிய, வழிமுறையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் புதிய யுத்திகளை கையாண்டு, அந்த துறைகளை காக்க முன்வருகின்றதோ, அதே போல, இந்த திரையரங்கு தொழிலாளர்களையும், திரையரங்குகளை நம்பிய மறைமுக தொழிலாளர்களையும், காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் மற்றும் திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories