February 20, 2026, 9:10 PM
27.3 C
Chennai

திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

meenatchi sundaram theatre sangam - 2026

தமிழக அளவில் 900 திரையரங்குகள் உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றினால், அந்த திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசு தனிக் கவனம் செலுத்தி சுகாதார முறையில், பாதுகாப்பான வழியில் திரையரங்குகளை திறக்க உதவி செய்யுமாறும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவரும், திருச்சி, தஞ்சை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான மீனாட்சி சுந்தரம், கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், திரையரங்கு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, தயாரிப்பாளர்கள் எப்படியும் அந்த திரைப்படங்களை வெளியிட்டு லாபம் பார்க்க வேண்டுமென்றால். அந்த திரையரங்குகள் மூலம் தான் இயங்க முடியும்.

ஆகவே இந்த திரையரங்குகளை நம்பியுள்ள 25 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் அரசு காத்திடவேண்டும். அரசு எப்படி பேருந்து மற்றும் தொடர் வண்டிகளை குறிப்பிட்ட விதிகளின் படி அனுப்ப ஆயத்தமாகின்றதோ, அதே போல, திரையரங்குகளையும், கொரோனா வைரஸ் பரவாமல் மக்களை காத்திடும் பொருட்டு, சுகாதார துறை வழிமுறைகளை பின்பற்றி அரசு இந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

ஒரு திரையரங்கிற்கு சுமார் 3 லட்சம் என்றால் 900 திரையரங்குகளுக்கு பல கோடி ஆகின்றது. மேலும், திரையரங்குகளுக்கு கட்ட வேண்டிய மின்சார தொகை இன்றும் கட்டப்படவில்லை, ஆகவே கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ளார்களே தவிர அந்த மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்படவில்லை.,

ஆகவே மற்றதுறைகளுக்கு எப்படி சலுகைகளுடன் பாதுகாப்புகள் அடங்கிய, வழிமுறையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் புதிய யுத்திகளை கையாண்டு, அந்த துறைகளை காக்க முன்வருகின்றதோ, அதே போல, இந்த திரையரங்கு தொழிலாளர்களையும், திரையரங்குகளை நம்பிய மறைமுக தொழிலாளர்களையும், காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் மற்றும் திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories