மதுரையில் கடுமையான கடடுப்பாடுகளுடன் தேநீர் கடைகளில் விற்பனை!

madurai tea shop - 2026

மதுரை: பார்சல் டீ மட்டும் விற்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. விதியை மீறிய கடைகளுக்கு சீல் வைக்கப் படுகிறது!

மதுரை நகரில் பல இடங்களில் செயல்பட்டு வரும் டீக்கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்திருப்பதால், பார்சல் டீயும் கடையின் வாசலிலே, பொது மக்களை நிறுத்தி வழங்கப்படுகிறது.

மதுரையில் அனைத்துக் கடைகளிலும் பொது மக்கள் கடைக்குள் புகுந்து விடாமல் இருக்க கடை நிர்வாகம், கடையின் வாசலிலேயே தடுப்புக்களை ஏற்படுத்தி, பணத்தைப் பெற்றுக் கொண்டு பார்சல் டீ மற்றும் காப்பி போன்றவற்றை பாத்திரங்களில் கடைக்காரர்களே வந்து வழங்கி வருகின்றனர். அவ்வாறு பார்சல் வாங்கும் தேநீரை பொதுமக்கள் கடை வாசலில் நின்று அருந்த கட்டாயம் அனுமதிப்பதில்லை.

அதே நேரம், சோழவந்தான், செக்கானூரனி, தேனூர், தென்கரை, முள்ளிப்பள்ளம், பேரையூர், கல்லுப்பட்டி, திருவாதவூர், திருவேடகம், கருப்பட்டி, இரும்பாடி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், ஊர்மெச்சிக்குளம், சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் தேநீரை பொதுமக்கள் வாங்கி கூட்டம் போடாமல், கடையை விட்டு தள்ளி நின்று அருந்த அனுமதிக்கின்றனர். மதுரை மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்வதால், டீக்கடையின் உரிமையாளர்கள் பார்சலை கையில் கொடுத்து கடையின் வாசலோடு அனுப்பி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி காவல் நிலையம் அருகே கடையில் டீ குடிக்க பொதுமக்களை கடையின் உரிமையாளர் அனுமதித்ததால், அந்தக் கடைக்கு வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories