December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

காதலியை கர்ப்பமாக்கி விட்டு இன்னொரு பெண்ணையும் மணந்த இளைஞர்!

orathanadu - 2025

ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (29). இவர் அதேபகுதியில் கூல்ட்ரிங்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரும் இடையாத்தி கிராமம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகள் முதுநிலை பட்டதாரியான சண்முகப் பிரியாவும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட லெனின் கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி சண்முகப்பிரியாவிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, சண்முகப்பிரியா கர்ப்பமாகிவிட தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லெனினிடம் பலமுறை கேட்டள்ளார். ஆனால், கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி லெனின் சண்முகப்பிரியாவிடம் கூறியிருக்கிறார்.

ஆனால், சண்முகப்பிரியா கர்ப்பத்தைக் கலைக்கவில்லை. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சண்முகப்பிரியா புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் சண்முகப்பிரியாவால் ஊருக்கு வர முடியவில்லை.

இதைப் பயன்படுத்திக்கொண்ட லெனின் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரக்கண்ணு என்பவரின் மகளான ஐஸ்வர்யா என்ற முதுநிலை பட்டதாரி பெண்ணை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், புதுக்கோட்டையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய சண்முகப்பிரியாவுக்கு லெனின் திருமணம் செய்த விஷயம் தெரியவந்துள்ளது.

உடனே லெனினை தொடர்புகொண்டு கேட்டதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து சண்முகப்பிரியா, “லெனின் என்பவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். அவரால் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன். அவர், மீது நடவடிக்கை எடுங்க. என்னுடன் சேர்த்து வைங்க’ என பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சண்முகப்பிரியா போலீஸிடம் புகார் கொடுத்ததையறிந்த லெனின் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, உயிருக்குப் போராடிய அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அவரின் உறவினர்கள். அங்கு லெனினுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை நிறைமாத கர்ப்பிணியான சண்முகப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னர் சண்முகப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த லெனின், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது சண்முகப்பிரியாவின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஒரு இளைஞர் செய்த தவறான செயலால் இன்றைக்கு இரண்டு பட்டதாரி பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டது. இதில், கொடுமை என்னவென்றால் சண்முகப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது தெரியாமலேயே லெனின் இறந்துவிட்டார்.

லெனினை நம்பி காதலித்த சண்முகப்பிரியா மற்றும் பெற்றோரால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு லெனினை கரம் பிடித்த ஐஸ்வர்யா என இரண்டு பெண்களின் நிலையை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. இதுகுறித்து வாட்டாத்திக் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories