மதுரையில் சேவாபாரதி சார்பில் 5 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து! தொடங்கி வைத்த ஆட்சியர்!

madurai sevabharathi
madurai sevabharathi

மதுரையில் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 5 லட்சம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இதனைத் தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25ஆம் தேதி முதல் மதுரையில் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பில் பல்வேறு சேவைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

madurai sevabharathi
madurai sevabharathi

ஊரடங்கின் காரணமாக பசியால் வாடும் ஏழைகளுக்கும், அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுவரை 1,42,500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 7,460 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,10,000 பேருக்கு கபசுர குடிநீர், 10,000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சேவைப் பணிகளால் நேரடியாக சுமார் 1,65,000 பேர் பயனடைந்துள்ளனர்.

தற்போது அரசு பரிந்துரைத்துள்ள ஆர்ச்சனிச்ம் ஆல்பம் 30 என்கிற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பாக மதுரையில் சுமார் 5 லட்சம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

madurai sevabharathi
madurai sevabharathi

இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 9மணிக்கு மதுரை எஸ்.எஸ் காலனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. ஜெயபிரகாசம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் இரா.தீனதயாளன், அகில இந்திய ஹோமியோ லீக் மதுரை தலைவர் மரு.தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

madurai sevabharathi
madurai sevabharathi கேசவ சேவா கேந்திரம் டிரஸ்டி ஸ்ரீனிவாசன்

இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை குறைந்தது 20 குடும்பங்களுக்கு அல்லது 100 பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய விருப்பம் உள்ள சமூக ஆர்வலர்களை சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் வரவேற்பதாகவும், தங்கள் விருப்பத்தை
இராமச்சந்திரன் ( 94861 08686 ), சதீஷ் பாபு (95972 79061) ஆகியோரைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் மருந்தைப் பெற்று கொள்ளலாம் என்றும் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பில் அதன் டிரஸ்டி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories