சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு மதுரை மாவட்ட நீதி மன்றம் இன்று திறக்கப்பட்டது.
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஐந்து வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப் பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு ‘கொரோனா ‘ அறிகுறி பரிசோதனை, செய்யப்பட்டது.
கிருமிநாசினி – சானிடைசர், மாஸ்க் – முகமூடி உள்ளிட்டவை வழங்கப் பட்டன. கட்சிக் காரர்கள், வெளி நபர்கள் யாரும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க பட வில்லை..
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை