யாக குண்டத்தில் இருந்து எடுத்த சூடான நாணயம்.. பைக்கில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு!

sankeetha
sankeetha

யாக குண்டத்தில் எடுத்த சூடான நாணயங்களை ஸ்கூட்டரில் கொண்டு சென்றபோது சேலையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி அழகிரிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சங்கீதா (33). இவர் மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி சங்கீதா கச்சிராயன்பட்டியில் நடந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு யாக குண்டத்தில் போடப்பட்ட காசுகளை எடுத்து, வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என நம்பிக்கையினால், அவர் யாக குண்டத்தில் இருந்து சூடான நாணயங்களை எடுத்து பொட்டலமாக மடித்து, தனது ஸ்கூட்டரின் இருக்கையின் அடியில் வைத்துள்ளார்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலக்கிபட்டி 4 வழிச்சாலையில் திடீரென சூடான நாணயங்களில் தீப்பற்றியதில், சங்கீதாவின் சேலையில் தீ பரவியது.

பின்னர், மளமளவென உடல் முழுவதும் தீப் பற்றியதில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்தனர்.

உடலில் 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories