December 6, 2025, 3:18 AM
24.9 C
Chennai

பிக்பாஸில் தற்கொலை முயற்சியா?: விசாரணைக்கு ஆஜராக ஓவியாவுக்கு போலீஸார் உத்தரவு!

Bigg Boss Tamil Cops summon Oviya for suicide attempt - 2025

சென்னை:

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் போது, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகை ஓவியாவுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் வெளியுலகத் தொடர்பின்றி, 100 நாட்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டும். இதற்காக சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் வீடு போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற நடிகை ஓவியா, சக பங்கேற்பாளரான ஆரவ்வை காதலித்ததாகவும், அதை அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு ‘பிக்பாஸ்’ வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கினார் என்றும், அவரை சினேகன் உள்ளிட்டோர் காப்பாற்றுவது போன்றும் காட்சிகள் ஒளிபரப்பானது.

ஆனால், அதற்கு முன்னதாகவே ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. அதனை ஓவியாவும் உறுதி செய்ததாகவும் கூறப்பட்டது. இதனால் போலீசார் பிக்பாஸ் நிகழ்ச்சி செட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறி சொந்த ஊருக்குச் சென்று விட்டதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து வக்கீல் எஸ்.எஸ்.பாலாஜி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த மனு மீது விசாரணை நடத்த நசரத்பேட்டை போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். மேலும், எஸ்.எஸ்.பாலாஜியும் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நடிகை ஓவியா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் அவரது மேலாளரிடம் போனில் பேசினோம். அதற்கு அவர், தற்போது ஓவியா சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து வந்ததும் நேரில் அழைத்து வந்து அவரது தரப்பு விளக்கத்தை அளிப்பதாகவும் கூறினார்” என்று தெரிவித்தனர். எனவே, சிகிச்சை முடிந்து வந்ததும் ஓவியா, நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே ஓவியா, ஒரு விளையாட்டுக்காகவே, தான் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதுபோல் நடித்ததாகக் கூறி இருப்பது போன்ற வீடியோ பதிவுகளை அந்தத் தொலைக்காட்சி நிர்வாகம் போலீசாரிடம் அளித்துள்ளதாம். எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட சினிமா கதை போன்ற படப்பிடிப்புதான் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories