December 13, 2025, 5:25 PM
28.1 C
Chennai

எட்டு விரைவு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் ரயில் பெட்டி ஒன்று: ரயில்வே

சென்னை: எட்டு விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: கோயம்புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.12647/12648) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து வருகிற 22-ந் தேதியும், ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து 25-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. திருச்சி-ஹவுரா இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் திருச்சி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12664/12663) கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை திருச்சியிலிருந்து நாளை முதலும், ஹவுராவிலிருந்து வருகிற 22-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. கோயம்புத்தூர்-சென்னை சென்டிரல் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12682/12681) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும் சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12682/12681) கூடுதலாக 2 படுக்கை வசதி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட இருக்கிறது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும், சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை சென்டிரல்-ஜம்மு தாவி இடையே இரு மார்க்கமாகவும் (வாரம் மூன்று முறை) இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16031/16032) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னை சென்டிரலிருந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. ஜம்முதாவியிலிருந்து நாளை முதல் செயல்பட இருக்கிறது. சென்னை சென்டிரல்-லக்னோ இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வார இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16093/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் 21-ந்தேதியும், லக்னோவிலிருந்து 23-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரஇருக்கிறது. ராமேசுவரம்-குஜராத் மாநிலம் ஒகா இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16733/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை ராமேசுவரத்திலிருந்து நாளை முதலும், ஒகாவிலிருந்து வருகிற 24-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை சென்டிரல்-பழனி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22651/22652) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. பழனியில் இருந்து இன்று முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories