வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்… சென்னையில் 500 பேருக்கு டெங்கு

சென்னை மாநகராட்சி அலட்சியம்..! வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் சென்னையில் 500
பேருக்கு டெங்கு

சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல்
சுகாதாரத்துறை திணறி வருகிறது. பருவமழை தொடங்கிய நாளில் இருந்து ெசன்னையில்
ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக,
500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 200 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. டெங்கு காய்ச்சல்
பரவாமல் எப்படியாவது தடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை
எடுத்தாலும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். கடந்த ஆண்டு
டெங்கு காய்ச்சல் பரவிய போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சித்த மருத்துவத்தில் உள்ள நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு
போன்றவற்றை கொடுத்து வந்தனர்.

அதனுடன் சேர்த்து அலோபதி மருத்துவத்தில் உள்ள மருந்துகளையும் உட்கொண்டதால்
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு
பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. மேலும் சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால்
பொதுமக்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து பலநாள்
வைத்திருப்பதால் அதில் டெங்கு காய்ச்சல் உண்டு பண்ணும் ெகாசுக்கள்
உற்பத்தியாகிறது.

மேலும் மழைநீர் வீடுகள் மற்றும் சாலையோரங்களில் தேங்கி நிற்பதால் அதன் மூலமும்
கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த
முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி,
சூளைமேடு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே டயர்கள், தொட்டிகள்,
பெயின்ட் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் மழைநீர் சேராமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை
தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories