மகளின் காதல் விவகாரம்! கழுத்தை நெரித்து கொன்ற தந்தை!

Screenshot_2020_0814_113006

ஆண்டிபட்டியில் ஏற்கனவே திருமணமானவரை காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நாடார் தெருவில் வசித்து வருபவர் முருகன்(வயது 45). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர். அவரது மகள் பெயர் தவமணி (வயது 21). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தவமணி அதேபகுதியை சேர்ந்த திருமணமான ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தெரிந்தவுடன் தவமணியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் தவமணிக்கு திருமண ஏற்பாடும் செய்துள்ளனர்.

ஆனால் தவமணி திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தவமணி, தந்தை என்றும் பாராமல் முருகனை கட்டையால் தாக்கி உள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு ஆத்திரமடைந்த முருகன் தவமணி தூங்கிக் கொண்டிருந்த போது சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

மேலும் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி,உறவினர்கள் உதவியுடன் தவமணியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதுகுறித்து தனிப்பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்ரீ நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் முருகனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து முருகன் மீது வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் முருகனை கைது செய்து,இறந்த தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமானவரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories