மகளின் காதல் விவகாரம்! கழுத்தை நெரித்து கொன்ற தந்தை!

Screenshot_2020_0814_113006

ஆண்டிபட்டியில் ஏற்கனவே திருமணமானவரை காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நாடார் தெருவில் வசித்து வருபவர் முருகன்(வயது 45). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர். அவரது மகள் பெயர் தவமணி (வயது 21). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தவமணி அதேபகுதியை சேர்ந்த திருமணமான ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தெரிந்தவுடன் தவமணியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் தவமணிக்கு திருமண ஏற்பாடும் செய்துள்ளனர்.

ஆனால் தவமணி திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தவமணி, தந்தை என்றும் பாராமல் முருகனை கட்டையால் தாக்கி உள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு ஆத்திரமடைந்த முருகன் தவமணி தூங்கிக் கொண்டிருந்த போது சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

மேலும் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி,உறவினர்கள் உதவியுடன் தவமணியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதுகுறித்து தனிப்பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்ரீ நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் முருகனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து முருகன் மீது வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் முருகனை கைது செய்து,இறந்த தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமானவரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories