வடை கடையாக மாறிய ஆட்டோ! அசத்தும் ஆட்டோக்காரர்!

Screenshot_2020_0814_173752

கொரோனாவால் வாழ்வாதாரத்திற்காக தனது ஆட்டோவை வடை கடையாக மாற்றியவருக்கு குவியும் பாராட்டுக்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் என்ன செய்வதென்றே தெரியாமல் கடந்த சில மாதங்களாகவே அப்படியே நின்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர்.

இந்நிலையில், மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளது. இவர் கோச்சடை பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருமானம் தேடி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து மூன்று மாதங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 5 ஆம் கட்ட தளர்வாக ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதித்தது. இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வருமானம் இன்றி ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்து வரக்கூடிய சூழ்நிலையில் பாலசுப்பிரமணியம் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு தனது ஆட்டோவை வடை கடையாக மாற்றி 4 வடை பத்து ரூபாய் என விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆட்டோவில் அடுப்பு, வடை சுடும் பாத்திரம், வடை கண்ணாடிப் பெட்டி என சவாரி செய்யப் பயன்பட்ட ஆட்டோ தற்பொழுது முழுவதுமாக வடை கடை போலவே மாறி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டினாலும் எனக்கு ஹோட்டல் தொழிலும் தெரியும். ஹோட்டல் ஒன்று வைத்திருந்தேன், பொதுமக்கள் வெளியில் சாப்பிட அஞ்சுகின்றனர். இதனால் ஹோட்டலையும் மூடி விட்டேன். எனது ஆட்டோ வடை கடையை வைத்து அதன் மூலம் 500 ரூபாய் வரை ஒரு நாளைக்கு ஈட்டி வருகிறேன். அரசு விரைவில் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை காக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories