December 6, 2025, 4:56 AM
24.9 C
Chennai

மதுரை அரசு மருத்துவ மனைகளில் அமைச்சர், சுகாதார செயலர் ஆய்வு!

jradhakrishnan-inspection-madurai
jradhakrishnan-inspection-madurai

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன் தலைமையில் ,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு தொடர்பாக
ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி தெரிவித்தாவது:

மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அரசுச் செயலாளர் வழிகாட்டு நெறிமுறைககளை வழங்குகிறார். ஒவ்வொரு அரசு அலுவலர்கள் முன்கள பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு சேவை செய்வது குறித்து எடுத்துரைத்தார்.

இந்தியாவிலேயே அதிகமான கொரோனா காய்ச்சல் பரிசோதனை தமிழ்நாட்டில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு எடுத்துவரம் நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரை மாவட்டத்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்து இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவால் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வீடுகளுக்கே சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பு தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.

jradhakrishnan-inspection-madurai1
jradhakrishnan-inspection-madurai1

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் தெரிவிக்கையில்:

அரசு அலுவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களால் நோய்த் தாக்கம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்து வதற்காக இரண்டு அரசாணைகள் மூலம் 150 கோடி ஒதுக்கப்பட்டது.

முன்னதாக, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
கள்ளிக்குடி வட்டம் வில்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் மருத்துவ முகாமினை துவக்கிவைத்து பார்வையிட்டார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories