December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இணையாக புதிய பிக்கிராபி செயலி! எட்டாம் வகுப்பு மாணவன் சாதனை!

Screenshot_2020_0816_191201

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு சவால் விடும் வகையில், தேனியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் உருவாக்கிய `பிக்கிராபி’ செயலி பயன்பாட்டாளர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தேனி, கர்னல் ஜான்பென்னிகுக் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலமுருகன்(45). மனைவி ஜெயமணி. மகன் மிதுன்கார்த்திக்(13), மகள் கனிஷ்கா(10). இருவரும் தனியார் பள்ளியில் 8 மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக பஹ்ரைனில் கட்டிடப் பொறியாளராக பணியாற்றிய பாலமுருகன், கடந்த 5ஆண்டுகளுக்கு முன்புதான் குடும்பத்தினருடன் இந்தியா திரும்பினார்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக பள்ளி திறக்கப்படாத சூழ்நிலையில், வீட்டில் இருந்த மிதுன் கார்த்திக் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மாற்றாக ‘பிக்கிராபி’ என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.

லடாக் எல்லை பிரச்னையால் சீன தயாரிப்பு பொருட்களை தடை செய்த மத்திய அரசு, அந்நாட்டின் டிக்டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட செயலிகளை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இந்த செயலிகளுக்கு சவால் விடும் வகையில், மாணவர் மிதுன் கார்த்திக் பிக்கிராபி செயலியை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து மிதுன் கார்த்திக் கூறுகையில், “முழு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த பிக்கிராபி செயலியில், உரியவர்களின் அனுமதி இல்லாமல் பின் தொடர முடியாது. தகவல் திருட்டு, பக்கத்தை முடக்கம் செய்வது உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளும் எழாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டடமாக கருத்து பரிமாற்றம், புகைப்படம் பதிவேற்றுதல், அதனை பகிர்தல், லைக் செய்தல், அதற்கு கருத்து தெரிவித்தல் என முகநூலில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் ‘பிக்கிராபி’ செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் எனது செயலியை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்” என்றார்.

மிதுன் கார்த்திக் மேலும் கூறுகையில், ”எனது செயலிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், ஜூம் செயலிக்கு மாற்றாக விரைவில் வீடியோ அழைப்புக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் வசதிகள் கொண்ட ‘ஹலோ நண்பா’ என்ற செயலியை அறிமுகப்படுத்தப்பட உள்ளேன். இந்த செயலியில் அதிக நபர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் ஆலோசனையில் ஈடுபடுவது போல செயலியை அறிமுகபடுத்தப்பட உள்ளேன்” என்றார்.

மிதுன் கார்த்திக்கின் தந்தை பாலமுருகன் கூறுகையில், ”குழந்தை பருவத்திலேயே கம்ப்யூட்டர் கற்பதில் ஆர்வமாக இருந்தான். வளர்ந்ததும் இணையதளத்தில் தனது தேடல்களை துவக்கினான். தானாகவே புரோகிராம் செய்து புதிய இணையதளங்களையே உருவாக்கினான். யோகா வெப்சைட்டையும் உருவாக்கியுள்ளான்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories