December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

இரண்டாம் தலைநகர்… அரசியல் தளத்தில் பிழையாகிவிடும்!

tamilnadu day copy
tamilnadu day copy

இரண்டாம் தலைநகர் என்று சொல்ல முடியாது… சொன்னால் அரசியல் தளத்தில் பிழையாகிவிடும்

மதுரையில் உலகத்தமிழ் நாடு நடந்தபோதே, தமிழகத்திற்கான புதிய தலைநகரம் பற்றிய பேச்சுகள் தொடங்கின. அந்த காலகட்டத்தில் பழ.நெடுமாறன், மதுரை நகரத்தின் கலாச்சார முக்கியத்துவம் பற்றிப் பேசியதாக ஞாபகம்.

நிர்வாக ரீதியாக மதுரையை மையப்படுத்தி மாற்றங்களைச் செய்யலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். தமிழக வரலாற்றில் பழைமையான நகரங்களாக மதுரை, நெல்லை,உறையூர், தஞ்சை, காஞ்சிபுரம் போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எண்பதுகளில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையை மதுரைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினோம். அதற்காக மத்திய அரசு 1983 ஆம் ஆண்டு வாக்கில் நீதிபதி ஜஸ்வந்த் சிங் தலைமையில் ஒரு கமிட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.

அதற்கு பிறகு 28 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டது. கடந்த 1980 களின் துவகத்தில் திருச்சியை தலைநகராக மாற்றலாம் என்று எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் அது சாத்தியப்படாமல் முடிந்துவிட்டது.

தொழிலுக்கான ஒரு நகரம், நிர்வாகத்திற்கு ஒரு நகரம், நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு ஒரு நகரம் என்று உருவாக்கலாம். கேரளத்தில் உயர் நீதிமன்றம் எர்ணாகுளத்தில் இருக்கிறது. தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லாம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக மதுரையை தலைநகராக்கலாம் என்ற பட்டும் படாமல் விவாதம் நடந்து வருகிறது. இப்போது மீண்டும் அதே குரல். இரண்டாவது தலைநகரம் என்பதில் தெளிவு வேண்டும். இரண்டு தலைநகரங்களை உருவாக்கமுடியாது. அதில் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும்.

காஷ்மீரில் குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராகவும் கோடை காலத்தில் ஸ்ரீநகரை தலைநகராகவும் கொண்டுள்ளார்கள். அதே போல் மத்திய பிரதேசத்தில் இந்தூரிலும், மகாராஷ்டிரத்தில் நாக்பூரிலும் முகாம் சட்டமன்றங்கள் மட்டும் நடத்தப்பட்டன.

எப்படி அன்றைய சென்னை மாநிலத்தில் 1950களில் கோடை காலத்தில் உதகமணடலத்தில் சட்டமன்றம் நடந்ததோ, ஆந்திரத்தில் இன்றைக்கு அமராவதியில் சட்டமன்றமும், விசாகபட்டினம் தலைமை செயலகம், கர்னூலில் உயர்நீதிமன்றம் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆந்திர உதயமான போது கர்னூலில்தான் செயல்பட்டது. ஏற்கனவே கேரளத்தில் மாநில தலைநகரம் திருவனந்தபுரத்திலும், உயர்நீதிமன்றம் கொச்சியிலும் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் இப்படியான நிலை உள்ளது.

இப்படியான நடைமுறைகள் இருந்தாலும் கூட ஒரு மாநிலத்திற்கு தலைமை செயலகம் அமைந்த பகுதியே தலைநகராக இருக்க முடியும். இரண்டாம் தலைநகர் என்று சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அரசியல் தளத்தில் பிழையாகிவிடும்.

ஒரு கட்டத்தில் மாநில தலைநகராக மதுரையை கொண்டு தென் தமிழகம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது வேறு விஷயம்.

  • கே. எஸ். இராதாகிருஷ்ணன்
    (செய்தி தொடர்பாளர், திமுக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories