இரண்டாம் தலைநகர்… அரசியல் தளத்தில் பிழையாகிவிடும்!

tamilnadu day copy
tamilnadu day copy

இரண்டாம் தலைநகர் என்று சொல்ல முடியாது… சொன்னால் அரசியல் தளத்தில் பிழையாகிவிடும்

மதுரையில் உலகத்தமிழ் நாடு நடந்தபோதே, தமிழகத்திற்கான புதிய தலைநகரம் பற்றிய பேச்சுகள் தொடங்கின. அந்த காலகட்டத்தில் பழ.நெடுமாறன், மதுரை நகரத்தின் கலாச்சார முக்கியத்துவம் பற்றிப் பேசியதாக ஞாபகம்.

நிர்வாக ரீதியாக மதுரையை மையப்படுத்தி மாற்றங்களைச் செய்யலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். தமிழக வரலாற்றில் பழைமையான நகரங்களாக மதுரை, நெல்லை,உறையூர், தஞ்சை, காஞ்சிபுரம் போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எண்பதுகளில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையை மதுரைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினோம். அதற்காக மத்திய அரசு 1983 ஆம் ஆண்டு வாக்கில் நீதிபதி ஜஸ்வந்த் சிங் தலைமையில் ஒரு கமிட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.

அதற்கு பிறகு 28 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டது. கடந்த 1980 களின் துவகத்தில் திருச்சியை தலைநகராக மாற்றலாம் என்று எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் அது சாத்தியப்படாமல் முடிந்துவிட்டது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தொழிலுக்கான ஒரு நகரம், நிர்வாகத்திற்கு ஒரு நகரம், நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு ஒரு நகரம் என்று உருவாக்கலாம். கேரளத்தில் உயர் நீதிமன்றம் எர்ணாகுளத்தில் இருக்கிறது. தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லாம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக மதுரையை தலைநகராக்கலாம் என்ற பட்டும் படாமல் விவாதம் நடந்து வருகிறது. இப்போது மீண்டும் அதே குரல். இரண்டாவது தலைநகரம் என்பதில் தெளிவு வேண்டும். இரண்டு தலைநகரங்களை உருவாக்கமுடியாது. அதில் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும்.

காஷ்மீரில் குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராகவும் கோடை காலத்தில் ஸ்ரீநகரை தலைநகராகவும் கொண்டுள்ளார்கள். அதே போல் மத்திய பிரதேசத்தில் இந்தூரிலும், மகாராஷ்டிரத்தில் நாக்பூரிலும் முகாம் சட்டமன்றங்கள் மட்டும் நடத்தப்பட்டன.

எப்படி அன்றைய சென்னை மாநிலத்தில் 1950களில் கோடை காலத்தில் உதகமணடலத்தில் சட்டமன்றம் நடந்ததோ, ஆந்திரத்தில் இன்றைக்கு அமராவதியில் சட்டமன்றமும், விசாகபட்டினம் தலைமை செயலகம், கர்னூலில் உயர்நீதிமன்றம் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆந்திர உதயமான போது கர்னூலில்தான் செயல்பட்டது. ஏற்கனவே கேரளத்தில் மாநில தலைநகரம் திருவனந்தபுரத்திலும், உயர்நீதிமன்றம் கொச்சியிலும் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் இப்படியான நிலை உள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இப்படியான நடைமுறைகள் இருந்தாலும் கூட ஒரு மாநிலத்திற்கு தலைமை செயலகம் அமைந்த பகுதியே தலைநகராக இருக்க முடியும். இரண்டாம் தலைநகர் என்று சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அரசியல் தளத்தில் பிழையாகிவிடும்.

ஒரு கட்டத்தில் மாநில தலைநகராக மதுரையை கொண்டு தென் தமிழகம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது வேறு விஷயம்.

  • கே. எஸ். இராதாகிருஷ்ணன்
    (செய்தி தொடர்பாளர், திமுக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories