December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

இறந்துபோன நபருக்கு கொரோனா! இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் பீதி!

corono - 2025

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சி கடை வீதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் ஒருவரின் மகனின் திருமணம் கடந்த 10ம் தேதி ஈரோட்டில் நடந்தது.

மகன் திருமண விழா முடிந்து, வீடு திரும்பிய மளிகை கடைக்காரர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி அவர் இறந்தார்.

இதையடுத்து, அவருடைய சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்தனர். அதன்பிறகே அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்ததும், அதனால்தான் அவர் இறந்தார் என்பதும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இறந்தவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் 22 பேருக்கு சுகாதாரத்துறையினர் இரு நாட்களுக்கு முன்பு சளி மாதிரிகள், ரத்த மாதிரிகளை சேககரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களில் 7 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இறுதிச் சடங்குகளில் 25 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்சொன்ன மளிகைக்கடைக்காரரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 9 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பீதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories