December 6, 2025, 4:20 AM
24.9 C
Chennai

தனி நபர்கள் வீடு/கோயில் வாயிலில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடையில்லை!

chnnai Hig court
chnnai Hig court

தனிநபர்கள் தங்கள் வீட்டு வாயிலிலும் கோவில் நுழைவாயிலிலும் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம்; ஒரு நபர் அதனை எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விநாயகர் சதுர்த்தி விழா குறித்த வழக்கினை முடித்து வைத்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடங்களில் தனிப்பட்ட வகையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தகுந்த இடைவெளியுடன் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்தது. அதேநேரம், வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில், கரைக்கலாம். சென்னையில் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிமனித இடைவெளியுடன் கரைக்கலாம் என்று தெரிவித்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

முன்னதாக, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கு விசாரணையின்போதும், அரசு விதித்துள்ள தடையைத் தளர்த்த இயலாது என தமிழக அரசு உறுதிபட தெரிவித்தது.

அதே நேரம், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படாது என்றும், அரசின் உத்தரவுக்கும் நடைமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யும் இந்து அமைப்புகள், குறிப்பாக இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் உறுதி கூறின.

இதை அடுத்து வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணாலான விநாயகர் சிலைகளைத் தனி நபர்களே நீர்நிலைகளில் கரைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், வீடுகளின் வாசலிலும், கோயில் வாசலிலும் தனி நபர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்தி, ஒருவரே அதை எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்றும், சென்னையில் மெரினா கடற்கரையைத் தவிர பிற நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் என்றும் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

webcopy-court-order
webcopy-court-order

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories