பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்ற அப்ரிதி, மிஸ்பா!

Published:

pakistan-cricket-team பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக், முன்னாள் கேப்டன் அப்ரிதி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றனர். உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது பாகிஸ்தான். இந்தத் தோல்வியால், அவர்களது உலகக் கோப்பை கனவு நனவாகவில்லை. உலகக் கோப்பை போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக இருவரும் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இருப்பினும், டி20, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடவுள்ளனர். 2002–ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், லாகூரில் அறிமுகமானார் மிஸ்பா உல் ஹக். தற்போது 40 வயதாகும் அவர் 162 ஒருநாள் போட்டிகளில் விளையாடியும் அதிகபட்சமாக 96 ரன்னே எடுத்துள்ளார். இதுவரை அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது அவருக்கு மிகப் பெரிய குறை. அதே நேரம் அப்ரிதி கடந்த 5 உலகக் கோப்பை போட்டிகளிலும் தொடர்ந்து ஆடிவருகிறார். ஆனால் அவர் இடம்பெற்ற அணி ஒரு முறைகூட கோப்பையை வெல்லவில்லை. சென்ற உலகக் கோப்பையிலும் கூட, அவரது தலைமையில் விளையாடி அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்றது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img