December 6, 2025, 7:09 AM
23.8 C
Chennai

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கோட்டைச் சுவர் இடிப்பு; நடவடிக்கை கோரி விஇப., ஆர்பாட்டம்!

srivilliputhur-vhp-protest-1
srivilliputhur-vhp-protest-1

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு விவகாரத்தில், சுவரை இடித்த நபர்களை கைது செய்யக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் ஆடிப்பூர கொட்டகை இருக்கின்றது. கடந்த வாரம் ஆடிப்பூர கொட்டகை பகுதியிலுள்ள, ஆண்டாள் கோவிலின் கோட்டைச் சுவர் அங்குள்ள சோமானி பவன் என்ற தனியார் மடத்தின் இடத்தை தற்காலிகமாக பெற்றுள்ள சில சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டது.

srivilliputhur-vhp-protest-2
srivilliputhur-vhp-protest-2

இடிக்கப்பட்ட கோட்டைச் சுவர் அமைந்துள்ள பகுதி, வானமாமலை ஜீயர் மடத்தின் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக, தனியார் அமைப்பிடம் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது சோமானி பவன் என்ற பெயருடன் செயல்படும் அந்தக் கட்டடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நபர், வியாபார நோக்கில் செயல்பட்டு அதனை மாற்றி அமைக்க முடிவு செய்தார்.

srivilliputhur-vhp-protest-3
srivilliputhur-vhp-protest-3

அதன் ஒரு பகுதியாக ஆண்டாள் கோவிலின் கோட்டை சுவர் இடிக்கப்பட்டது. கோட்டைச்சுவரை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுவரை இடிப்பது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆண்டாள் கோவில் கோட்டைச் சுவரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் குத்தகைக்கு விடப்பட்ட இடத்தை தனியாரிடமிருந்து மீட்டு, வானமாமலை ஜீயர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

srivilliputhur-vhp-protest-4
srivilliputhur-vhp-protest-4

தற்போது 144 தடை உத்தரவு இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், தொண்டர்களை திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் கைது செய்தனர்.

srivilliputhur-vhp-protest-5
srivilliputhur-vhp-protest-5

அப்போது மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories