December 6, 2025, 7:55 AM
23.8 C
Chennai

PUBG தடை; ஏபிவிபி உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு!

pubg-banned1
pubg-banned1

இந்தியாவின் பாதுகாப்பு, இளைஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், 118 சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் உள்பட, பல்வேறு மாணவர் நலன் விரும்பிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இதற்கு வரவேற்பு தெரிவித்து சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஏபிவிபி அமைப்பின் தென்தமிழக மாநில இணைச் செயலாளர் விக்னேஷ் இது குறித்து வெளியிட்ட கருத்து: பப்ஜி உட்பட 118 சீன செயலிகளை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ABVP மாணவர் அமைப்பு மனதார வரவேற்கிறது. மாணவர்கள் கையில் எதிர்கால இந்தியா என்பார்கள் ஆனால் இன்றைய மாணவர்களின் ஆறாவது விரலாக அலைபேசி உள்ளது. மேலும் பப்ஜி விளையாட்டு போன்ற சீன செயலிகள் மாணவர்களது நிகழ்காலத்தையே கேள்விக்குறி ஆக்குவதாக உள்ளது.

குறிப்பாக கொரோனா விடுமுறை காலத்தில் மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கச் செய்து மாணவர்களை மனநோயாளிகளாக மாற்றத் துடிக்கும் செயலிகள் தடை செய்யப்பட்டு இருப்பது பாராட்டிற்குரியது. மத்திய அரசின் இச்செயல் மூலம் வருங்காலங்களில் அலைபேசியை ஆக்கபூர்வமான வகைகளில் பயன்படுத்தி மாணவ சமுதாயம் வளர்ச்சி அடைய இது ஒரு நல்ல ஒரு துவக்கமாக இருக்கும் என ABVP கருதுகிறது… – என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாகவும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு பெருகியுள்ளது. இந்தியாவில் பப்ஜி (PUBG) இணைய விளையாட்டுக்குத் தடைவிதிக்கப் பட்டதை வரவேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமது டிவிட்டர் பதிவுகளில் வெளியிட்ட கருத்துகள்…

1) இந்தியாவில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப் படுவார்கள்!

2)  பப்ஜி இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். பா.ம.க.வின் கோரிக்கை தாமதமாக, வேறு காரணங்களுக்காக ஏற்கப்பட்டிருந்தாலும், இதனால் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி!

3) பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த விளையாட்டுக்கு அடிமையாகிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories