பண்பொழியில் இலவச மருத்துவ முகாம்: எம்.எல்.ஏ அபுபக்கர் தொடங்கி வைத்தார்!

Published:

P 20170930 113804 1 - 2026
IMG 20171001 WA0047 1 - 2026
P 20170930 112123 1 1 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி ஜாய் பப்ளிக் பள்ளியில் இந்திய
முஸ்லீம் லீக் மற்றும் ஷிபா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
நடந்தது.

மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். செங்கோட்டை காவல்
ஆய்வாளர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர்
எம்.நவாஸ்கான் வரவேற்றார்.

இந்த மருத்துவ முகாமை கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ முகமது அபுபக்கர் துவக்கி
வைத்து சிறப்புரை ஆற்றினார்.

முகாமில் நெல்லை ஷிபா மருத்துவமனை மருத்துவக் குழுவினர்கள் கலந்து கொண்டு
இருதயம், எலும்பு மூட்டு, முதுகு தண்டு வடம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு
மருத்துவம் மற்றும் இலவச ஆலோசனைகள் வழங்கினர். இதில் சுமார் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் உரிமையாளர் முஹம்மது ஷாபி, பண்பொழி
பேருராட்சி செயல் அலுவலர் முரளி, மாவட்டச் செயலாளர் இக்பால், பொருளாளர்
செய்யது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

முடிவில் ஜாய் பப்ளிக் பள்ளியின் தாளாளர் அலெக்ஸ் நன்றி கூறினார்.

Related articles

Recent articles

spot_img